பதிவு செய்த நாள்
12 அக்2018
00:07
சென்னை:வேலுார் மாவட்டம், திருப்பத்துார் தாலுகா, செவ்வாத்துார் கிராமத்தில், 1.80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, ‘வெர்மிகுலைட்’ கனிமம் விரிவாக்க தொழிற்சாலையை, முதல்வர் பழனிசாமி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் திறந்து வைத்தார்.
இந்த ஆலை, ஆண்டுக்கு, 2,520 டன் விரிவாக்கப்பட்ட, வெர்மிகுலைட் கனிமத்தை உற்பத்தி செய்து, 3.12 கோடி ரூபாய் மதிப்பிலான கனிமத்தை விற்பனை செய்ய உள்ளது. இத்தொழிற்சாலையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள், சுற்றுச்சூழல் மாசுபடாவண்ணம், பாதுகாப்பான முறையில் நிறுவப்பட்டுள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும், விரிவாக்கப்பட்ட வெர்மிகுலைட், வனத்துறை, வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறையில், இயற்கை உரங்கள் தயாரிப்பதற்கும், ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காகவும், கட்டுமான துறையில், மேற்கூரை வெப்பம் தாங்கியாகவும் பயன்படுத்தப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|