நாட்டின் முட்டை உற்பத்தி  10 ஆயிரம் கோடியை எட்டும் நாட்டின் முட்டை உற்பத்தி 10 ஆயிரம் கோடியை எட்டும் ...  பணவீக்கம் உயர்வு தொழில் உற்பத்தி சரிவு பணவீக்கம் உயர்வு தொழில் உற்பத்தி சரிவு ...
மொபைல் போன் விலை அதிகரிக்கும் இறக்குமதி பொருட்களுக்கு வரி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
23:57

புதுடில்லி:மத்திய அரசு, மின்னணு மற்றும் மொபைல் போன் சாதனங்கள் தயாரிப்பில் இடம்பெறும் பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 10 சதவீதம் உயர்த்தி, 20 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.


மேலும், மொபைல் போன் மற்றும் போக்குவரத்துக்கான மின்னணு சாதனங்களில் பயன்படும், பி.சி.பி., இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.இதனால், இறக்குமதி பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்கள், மொபல் போன் உள்ளிட்ட தொலை தொடர்பு சாதனங்கள் விலை அதிகரிக்கும்.


நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்து உள்ளது. இதை கட்டுப்படுத்த, அவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், வரி உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும், ரூபாய் மதிப்பு சரிவால், கச்சா எண்ணெய் உட்பட, நாட்டின் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது.இதன் தாக்கத்தால், நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இதை சமாளிக்கும் நோக்கிலும், மின்னணு, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகள் சார்ந்த பொருட்களுக்கு, இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.


கடந்த, 2002க்கு பின், இந்தாண்டு தான், ரூபாய் வெளி மதிப்பு, தொடர்ந்து சரிந்து வருகிறது. வரும் டிசம்பருக்குள், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 75ஐ எட்டும் என, 'புளும்பெர்க்' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.இந்தாண்டு, தற்போது வரை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 13 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்து உள்ளது.


மத்திய அரசு, செப்., 26ல், 19 பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதையடுத்து, தற்போது மீண்டும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு, நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)