பதிவு செய்த நாள்
14 அக்2018
00:25
புதுடில்லி:‘இமாமி
சிமென்ட்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான
அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம்
விண்ணப்பித்துள்ளது.
இமாமி சிமென்ட் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலமாக, 1,000 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு உள்ளது.
இதில், 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், மீதி, 500 கோடி ரூபாய்க்கு, நிறுவனர்கள், பங்குதாரர்கள் ஆகியோரின் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க உள்ளது.பங்கு
வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, கடன்களை அடைக்கவும்
நிர்வாகச் செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்நிறுவனத்தின்
புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ்,
ஆக்சிஸ் கேப்பிட்டல், சி.எல்.எஸ்.ஏ., இந்தியா, எடெல்வைஸ்
பைனான்ஷியல் சர்வீசஸ் மற்றும் நோமுரா பைனான்ஷியல் அட்வைஸரி அண்ட்
செக்யூரிட்டீஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன.இமாமி சிமென்ட் நிறுவனம், மூன்று தொழிற்சாலைகளை தற்சமயம் இயக்கி வருகிறது. கூடுதலாக ஒரு தொழிற்சாலையை அமைக்கவுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|