பதிவு செய்த நாள்
14 அக்2018
00:29
புதுடில்லி:பங்குகள்,
கடன் பத்திரங்கள் போன்ற நிதி சார்ந்த பரிவர்த்தனைகளில், நாடு
முழுவதும் ஒரே சீரான முத்திரைத் தாள் தீர்வை முறையை
அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்ட
மிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது,
பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசும், மாநில
அரசுகளும் வெவ்வேறு முத்திரைத் தாள் தீர்வையை வசூலிக்கின்றன.
தோல்வி
இதனால்
ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, நாடு முழுவதும் ஒரே சீரான முத்திரைத்
தாள் தீர்வை முறையை கொண்டு வர, பல ஆண்டுகளாக முயற்சி
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக, 1899ம் ஆண்டு,
முத்திரைத் தாள் சட்டத்தில் திருத்தம் செய்ய எடுத்த முயற்சிகள்
அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதற்கு, மாநில அரசுகள், முத்திரைத்
தாள் தீர்வை வசூலிக்கும் அதிகாரத்தை இழக்க விரும்பாததே காரணம்.
இது
தொடர்பாக, 2005ல், மத்திய அரசு, உயர்மட்டக் குழுவை அமைத்தது.
இக்குழு, கடன் பத்திரங்கள், ‘டிபெஞ்சர்’கள் போன்ற
நிதியினங்களுக்கான முத்திரைத் தாள் தீர்வை, மாநிலங்கள் அளவில்
வெவ்வேறாக உள்ளது குறித்து ஆராய்ந்தது.இதையடுத்து,
நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்கள், டிபெஞ்சர்கள்
ஆகியவற்றுக்கு, அனைத்து மாநிலங்களிலும், ஒரே சீரான முத்திரைத்
தாள் தீர்வை முறையை அமல்படுத்தலாம் என, மத்திய அரசுக்கு
பரிந்துரைத்தது.
இதை ஏற்று, 2011 -– 12 மத்திய பட்ஜெட்டில்,
இத்திட்டத்தை அறிவிக்க, அப்போதைய ஐக்கிய முன்னணி அரசு
திட்டமிட்டது. ஆனால், அது நடக்கவில்லை.இந்நிலையில்,பல்வேறு
வரிகளை நீக்கி, ஒரே வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., 2017, ஜூலை 1ல்
அமலானது. இதனால், தொழில் துவங்குவது சுலபமாகியுள்ளது.
நிறுவனங்களும் மிக எளிமையான முறையில் வரி செலுத்துகின்றன.
இதையடுத்து,
தொழில் புரிவதை மேலும் சுலபமாக்கும் வகையில், நிதியினங்களுக்கு
நாடு முழுவதும் ஒரே சீரான முத்திரைத் தாள் தீர்வை முறை அறிமுகமாக உள்ளது.
பாதிக்காது
தற்போது,
மத்தியிலும், 19 மாநிலங்களிலும், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி
ஆட்சி நடைபெறுவதால், முத்திரைத் தாள் சட்ட திருத்தத்தில் ஒருமித்த
கருத்து ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி ஆட்சி நடைபெறும் சில
மாநிலங்களுக்கு, தற்போது கிடைக்கும் முத்திரைத் தாள் தீர்வை
வாயிலான வருவாயில் எந்த பாதிப்பும் ஏற்படாது என, உறுதி
அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநிலங்களும் சட்ட
திருத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன.
அதனால், வரும்
பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், முத்திரைத் தாள் சட்ட திருத்த
மசோதா தாக்கல் செய்யப்படும் என, தெரிகிறது.இந்த மசோதா நிறைவேறி
சட்டமானால், மாநிலங்கள் இடையிலான நிதியினங்களின்
பரிவர்த்தனைகளுக்கு, ஒரே முத்திரைத் தாள் தீர்வை முறை அமலுக்கு
வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரம் யாருக்கு?
காசோலை,
‘பிராமிசரி நோட்டு, லெட்டர் ஆப் கிரெடிட், பில்ஸ் ஆப் லேடிங்’
பங்குகள், கடன் பத்திரங்கள் மாற்றம், காப்பீட்டு திட்டங்கள்
போன்றவற்றுக்கான முத்திரைத் தாள் தீர்வையை நிர்ணயிக்கும்
அதிகாரம், மத்திய அரசுக்கு உள்ளது. நிலம், அசையா சொத்துக்கள், குத்தகை, திருமணம், ஒப்பந்தம் போன்றவற்றுடன்,
நிதிப் பரிவர்த்தனைகளுக்கு, முத்திரைத் தாள் தீர்வையை
நிர்ணயிக்கும் அதிகாரம், மாநில அரசுகளுக்கு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|