பண்­டிகை கால, ‘ஷாப்­பிங்’கை திட்­ட­மி­டு­வது எப்­படி?பண்­டிகை கால, ‘ஷாப்­பிங்’கை திட்­ட­மி­டு­வது எப்­படி? ... கமாடிட்டி சந்தை  கமாடிட்டி சந்தை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2018
00:19

இந்­திய பங்­குச் சந்­தை­கள், கடந்த வாரம் உயர்ந்து, வர்த்­த­கம் ஆகின. தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, அதன் ஐந்து வார சரி­விற்கு பின், கடந்த வாரம், 300 புள்­ளி­கள் அதி­க­ரித்து, 10470 என்ற நிலை­யில்வர்த்­த­கம் முடி­வுற்­றது.


சர்­வ­தேச நில­வ­ரங்­கள், இந்­திய பங்­குச் சந்­தை­களுக்கு சாத­க­மாக அமைந்­தன. முக்­கி­ய­மாக, தொடர் சரி­வில் இருந்து வந்த டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, கடந்த வாரம், 50 பைசா அள­விற்கு மதிப்பு உயர்ந்­தது. இது, பங்­குச் சந்­தை­கள் உயர்வு பெறகார­ண­மா­கி­யது.


இரண்­டா­வ­தாக, கச்சா எண்­ணெய் விலை சரிவுகார­ண­மாக, நம் இறக்­கு­மதி சுமை குறைந்து, நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றை­யில் சிறி­த­ளவு முன்­னேற்­றம் காணப்­படும் என்ற கருத்­தும், பங்­குச் சந்­தை­கள் உயர வழி வகுத்­தது.


மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், சென்­செக்ஸ், மார்ச், 2016 மாதத்­திற்கு பின், அதா­வது, 30 மாதங்­க­ளுக்கு பின், கடந்த வாரம் நல்ல வளர்ச்­சி­யைக் கண்­டது குறிப்­பி­டத்­தக்­கது. மேலும், தொழில்­நுட்­பத் துறை, உலோ­கங்­கள் துறை பங்­கு­களும் உயர்ந்து காணப்­பட்­டன.


செப்­டம்­பர் மாதத்­தில், நாட்­டின் பண­வீக்க விகி­தம், 3.77 சத­வீ­த­மாக இருந்­தது. இது, முந்­தைய ஆகஸ்ட் மாதத்­தைக் காட்­டி­லும் அதி­க­மா­கும். இந்­திய ரூபா­யின் மதிப்பு சரிவு, மற்­றும் சர்­வ­தேச சந்­தை­யில் கச்சா எண்­ணெய் விலை உயர்வு போன்­ற­வற்­றால் பண­வீக்­கம்
அதி­க­ரித்­துள்­ளது.


மேலும், ஆகஸ்ட் மாதத்­திற்­கான இந்­திய தொழிற்­சாலை­கள் வளர்ச்சி விகி­தம், 4.3 சத­வீ­த­மாக சரிந்­தது. இது, முந்­தைய ஜூலை மாதத்­தில், 6.5 சத­வீ­த­மாக இருந்தது.அதி­க­ரிக்­கும் பண­வீக்க விகி­தம், குறைந்து வரும் தொழிற்­சாலை வளர்ச்சி விகி­தம், இந்­திய ரூபா­யின் மதிப்பு சரிவு, போன்ற சில கார­ணங்­க­ளால், கடந்த சில மாதங்­க­ளாக, பங்­குச் சந்­தை­கள் சரி­வில் வர்த்­த­க­மாகி வந்­தன.


மேலும், இந்­திய சேவைத் துறை­யின் வளர்ச்சி விகிதம், சந்­தை­யின் வளர்ச்­சிக்கு ஒரு கார­ண­மாக அமைந்­தது. இந்த சேவை துறை­யின் வளர்ச்சி, 2016 அக்­டோ­பர் மாதத்தை விட உயர்ந்து காணப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.


கடந்த வாரம், சர்­வ­தேச சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை சரிவு மற்­றும் இந்­திய ரூபா­யின் மதிப்பு உயர்வு கார­ண­மாக, எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிறு­வன பங்­கு­கள், பெரும் வளர்ச்சி கண்­டன.கடந்த வாரம், உள்­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­கள், 8,567 கோடி ரூபாய் மதிப்­புள்ள பங்­கு­களை கொள்­மு­தல் செய்­தன. வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள், 13 ஆயி­ரம் கோடி மதிப்­புள்ள பங்­கு­களை விற்­பனை செய்­த­னர்.


நிப்டி, 500 குறி­யீட்டு எண்­ணில் உள்ள பங்­கு­களில், கடந்த வாரம், அதானி பவர், எச்.பி.சி.எல்., – எச்.இ.ஜி., – எம்.ஆர்.பி.எல்., போன்ற பங்­கு­கள் விலை உயர்ந்­தும், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., டாடா மோட்­டார்ஸ் போன்ற நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள் சரி­வை­யும் சந்­தித்­தன.இந்த வாரம், நிப்­டியை பொறுத்­த­வரை, ரெசிஸ்­டென்ட்ஸ் 10,590 மற்­றும் 10,800 ஆகும். சப்­போர்ட் 10,250 ஆகும்.


முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)