பதிவு செய்த நாள்
15 அக்2018
00:19
இந்திய
பங்குச் சந்தைகள், கடந்த வாரம் உயர்ந்து, வர்த்தகம் ஆகின. தேசிய
பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, அதன் ஐந்து வார சரிவிற்கு பின்,
கடந்த வாரம், 300 புள்ளிகள் அதிகரித்து, 10470 என்ற நிலையில்வர்த்தகம் முடிவுற்றது.
சர்வதேச
நிலவரங்கள், இந்திய பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக அமைந்தன.
முக்கியமாக, தொடர் சரிவில் இருந்து வந்த டாலருக்கு நிகரான இந்திய
ரூபாயின் மதிப்பு, கடந்த வாரம், 50 பைசா அளவிற்கு மதிப்பு உயர்ந்தது.
இது, பங்குச் சந்தைகள் உயர்வு பெறகாரணமாகியது.
இரண்டாவதாக, கச்சா எண்ணெய் விலை சரிவுகாரணமாக,
நம் இறக்குமதி சுமை குறைந்து, நடப்பு கணக்கு பற்றாக்குறையில்
சிறிதளவு முன்னேற்றம் காணப்படும் என்ற கருத்தும், பங்குச்
சந்தைகள் உயர வழி வகுத்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்,
சென்செக்ஸ், மார்ச், 2016 மாதத்திற்கு பின், அதாவது, 30 மாதங்களுக்கு
பின், கடந்த வாரம் நல்ல வளர்ச்சியைக் கண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், தொழில்நுட்பத் துறை, உலோகங்கள் துறை பங்குகளும் உயர்ந்து
காணப்பட்டன.
செப்டம்பர் மாதத்தில், நாட்டின் பணவீக்க விகிதம்,
3.77 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும்
அதிகமாகும். இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, மற்றும் சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் பணவீக்கம்
அதிகரித்துள்ளது.
மேலும்,
ஆகஸ்ட் மாதத்திற்கான இந்திய தொழிற்சாலைகள் வளர்ச்சி விகிதம், 4.3
சதவீதமாக சரிந்தது. இது, முந்தைய ஜூலை மாதத்தில், 6.5 சதவீதமாக
இருந்தது.அதிகரிக்கும் பணவீக்க விகிதம், குறைந்து வரும்
தொழிற்சாலை வளர்ச்சி விகிதம், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, போன்ற
சில காரணங்களால், கடந்த சில மாதங்களாக, பங்குச் சந்தைகள் சரிவில்
வர்த்தகமாகி வந்தன.
மேலும், இந்திய சேவைத் துறையின் வளர்ச்சி
விகிதம், சந்தையின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது. இந்த சேவை
துறையின் வளர்ச்சி, 2016 அக்டோபர் மாதத்தை விட உயர்ந்து காணப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம், சர்வதேச சந்தையில், கச்சா
எண்ணெய் விலை சரிவு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு காரணமாக,
எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன பங்குகள், பெரும் வளர்ச்சி கண்டன.கடந்த
வாரம், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், 8,567 கோடி ரூபாய்
மதிப்புள்ள பங்குகளை கொள்முதல் செய்தன. வெளிநாட்டு
முதலீட்டாளர்கள், 13 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை
செய்தனர்.
நிப்டி, 500 குறியீட்டு எண்ணில் உள்ள பங்குகளில், கடந்த
வாரம், அதானி பவர், எச்.பி.சி.எல்., – எச்.இ.ஜி., – எம்.ஆர்.பி.எல்.,
போன்ற பங்குகள் விலை உயர்ந்தும், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., டாடா
மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவையும் சந்தித்தன.இந்த வாரம், நிப்டியை பொறுத்தவரை, ரெசிஸ்டென்ட்ஸ் 10,590 மற்றும் 10,800 ஆகும். சப்போர்ட் 10,250 ஆகும்.
முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|