பதிவு செய்த நாள்
15 அக்2018
23:44
மும்பை:பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்த, 10 ஆயிரம் பேருக்கு, வருவாய் துறை விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2016, நவ., 8ல், உயர் மதிப்பு கரன்சிகள் செல்லாது என, திடீரென அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கறுப்பு பண முதலைகள், பினாமிகள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து, பழைய கரன்சிகளை மாற்றியுள்ளதாக கருதப்படுகிறது.இந்த வகையில், சந்தேகத்திற்கிடமான டெபாசிட்தாரர்களின் கணக்குகள் ஆராயப்பட்டு வருகின்றன. அவர்களின், ‘பான்’ அட்டை, மொபைல் போன் அழைப்புகள், ‘கிரெடிட்’ கார்டு, வருமான வரி கணக்கு தாக்கல் விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
இதற்காக, ‘பிக் டேட்டா’ எனப்படும் பிரமாண்ட தரவு தொகுப்பு ஆய்வு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.அவ்வாறு சேகரிக்கப்பட்டோரில், சந்தேகத்திற்கிடமான, 10 ஆயிரம் பேரிடம், டெபாசிட் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ், வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதில், கறுப்பு பண பேர்வழிகளுக்கு பினாமியாக செயல்பட்டது நிரூபணமானால், அபராதத்துடன், சிறைத் தண்டனையும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|