10,000 டெபாசிட்தாரர்களுக்கு வருவாய் துறை, நோட்டீஸ் 10,000 டெபாசிட்தாரர்களுக்கு வருவாய் துறை, நோட்டீஸ் ...  5 மாதங்களில் இல்லாத அளவிற்கு வர்த்தக பற்றாக்குறை குறைந்தது 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு வர்த்தக பற்றாக்குறை குறைந்தது ...
ஜெர்மனியில் கோடிகளை குவிக்கும் இந்தியாவின் 74 நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2018
23:48

மும்பை:இந்தியாவைச் சேர்ந்த, 74 நிறுவனங்கள், ஜெர்மனியில், 94,270 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ள தகவல், ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.இ.ஒய்., எனும் நிறுவனம், இந்தோ- ஜெர்மன் வர்த்தக சபை மற்றும் இந்திய தொழிலக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஜெர்மனியில் உள்ள, 74 நிறுவனங்கள், 94,270 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளன; மேலும், 23,300 பேருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி உள்ளன.வாகனம், உலோகம், ரசாயனம், தொழில்நுட்ப சேவை என, முக்கியமான நான்கு துறைகளின் வருவாயில், 95 சதவீதத்தையும், வேலைவாய்ப்பில், 89 சதவீதத்தையும் இந்த இந்திய நிறுவனங்கள் ஈர்த்துள்ளன.
ஜெர்மனியில், 213 இந்திய நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், 74 நிறுவனங்கள், ஆண்டுக்கு, 85.70 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களாக உள்ளன. இவற்றின் மொத்த ஆண்டு வருவாய், 94,270 கோடி ரூபாய்.சிறப்பான உள்கட்டமைப்பு, சாதகமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வசதி, புத்தாக்கத்துக்கான வாய்ப்பு, திறன்மிகு ஊழியர்கள் ஆகியவை, பிரமாதமான வணிக சூழலை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன.மேலும், தற்போதைய சூழலில், ஐரோப்பிய சந்தை, இந்திய நிறுவனங்களுக்கு முக்கியமான ஒன்றாகி உள்ளது.
கட்டுபடியாகும் விலையில் தரமான வாழ்க்கை வாழும் சூழலும், இந்திய முதலீட்டாளர்களை ஜெர்மனி நோக்கி ஈர்த்து உள்ளது.அரசால் இலவசமாக வழங்கப்படும் கல்வியும், அதன் தரமும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஏற்ற இடமாக ஜெர்மனியை மாற்றியுள்ளது. பாதுகாப்பு விஷயமும் மேம்பட்டதாக இருப்பதால், இந்திய முதலீட்டாளர்கள் ஜெர்மனியை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)