பதிவு செய்த நாள்
15 அக்2018
23:50
புதுடில்லி:நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு, செப்டம்பரில், 1,398 கோடி டாலராக குறைந்துள்ளது.
இது, ஆகஸ்டில், 1,739 கோடி டாலராக இருந்தது.அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில்,வர்த்தகப் பற்றாக்குறை குறைந்திருப்பது, மத்திய அரசுக்கு ஆறுதல் அளிக்கும் எனலாம்.ஐந்து மாதங்களுக்கு பின், செப்டம்பரில், ஏற்றுமதி வளர்ச்சி, 2.15 சதவீதமாக குறைந்துள்ளது;
இறக்குமதி, 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தாண்டு, ஏப்., – செப்., வரை, ஏற்றுமதி, 12.5 சதவீதம்; இறக்குமதி, 16.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9,432 கோடி டாலர் வர்த்தகப் பற்றாக்குறைக்கு வழி கோலியுள்ளது. கடந்த ஆண்டு, இதே காலத்தில், வர்த்தகப் பற்றாக்குறை, 7,210 கோடி டாலராக இருந்தது.மத்திய அரசு, சமீபத்தில் இரு முறை, அவசியமற்ற பொருட்கள் பலவற்றின் இறக்குமதி வரியை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|