பதிவு செய்த நாள்
16 அக்2018
23:46
சென்னை : -சென்னையில், அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம் நடைபெற உள்ள, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி, தமிழக அரசு, 50க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியது.
அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம், 23 மற்றும் 24ம் தேதிகளில், சென்னையில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று, சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள தொழில் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழக தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் பேசியதாவது: அன்னிய முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தற்போது, 3 ஆயிரம் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் கால்பதித்துள்ளன. தமிழகத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்களுக்கு, ஆதரவு அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர் பேசியதாவது: இதற்கு முன்பு நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, 200 கோடி ரூபாய் வர்த்தகத்தை மேற்கொண்டோம். இம்முறை அதைவிட கூடுதலாக மேற்கொள்ள முடியும் என, நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்ற, தமிழக தொழில்துறை கூடுதல் தலைமை செயலர், ஞானதேசிகன், வங்கியாளர்கள் தொழில்துறை வாடிக்கையாளர்களிடம் முதலீட்டு திட்டங்கள் குறித்தும், மாநில அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பயன்கள் குறித்தும் விளக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|