பதிவு செய்த நாள்
20 அக்2018
00:44
சென்னை: இண்டஸ்இண்ட் வங்கியின், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு, செயல்பாட்டு லாபம், 22 சதவீதம் உயர்ந்துள்ளது.இது குறித்து, வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் மொத்த வணிகம், 3 லட்சத்து, 31 ஆயிரத்து, 363 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 2 லட்சத்து, 64 ஆயிரத்து 622 கோடி ருபாயாக இருந்தது. இதன் மூலம் இந்த காலாண்டில், 25 சதவீதம் வளர்ச்சி அடைந்துஉள்ளது.மேலும், நிகர வட்டி வருவாய், 2.203 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டில், 1,821 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம், நடப்பு நிதியாண்டில், 21 சதவீதம் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.செயல்பாட்டு லாபம் கடந்த நிதியாண்டை விட, 358 கோடி ரூபாய் அதிகரித்து, 22 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டு நிகர லாபம், 920 கோடி ரூபாய். இதுவே கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 880 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்ட விட, 11 சதவீதம் வளர்ச்சி குறைவு. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம், 1,036 கோடி ரூபாய்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|