அப்படியா அப்படியா ... டாப் கியரில் எகிறும் பழைய கார் விற்பனை டாப் கியரில் எகிறும் பழைய கார் விற்பனை ...
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., மீள அமெரிக்க பாணியில் முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2018
23:15

புதுடில்லி : ஐ.எல்., அண்டு எப்.எஸ்., உரிமை பங்கு வெளியீடு தோல்வி அடைந்ததை அடுத்து, அந்நிறுவனத்தை காப்பாற்ற, மத்திய அரசு, அமெரிக்க பாணியை பின்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம், 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கிஉள்ளது. இதையடுத்து, இயக்குனர் குழுவை கலைத்து, உதய் கோட்டக் தலைமையில் புதிய இயக்குனர் குழுவை, மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில், அக்., 5ல் இந்நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீடு துவங்கி, 19ல் முடிவடைந்தது. இதில், 4,500 கோடி ரூபாய் திரட்டப்படும் என எதிர்பார்த்த நிலையில், பங்கு முதலீட்டாளர்களின் ஆதரவு இல்லாததால், இவ்வெளியீடு தோல்வி அடைந்தது.

இதனால், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., முதிர்ச்சி அடைந்த கடன் பத்திரங்களுக்கு, முதலீட்டை திரும்ப அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.‘டார்ப்’ திட்டம்இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த, 2008ல், அமெரிக்காவின் லேமென் பிரதர்ஸ் வங்கி திவாலானது. இதன் தாக்கத்தால், நிதி, வீட்டு வசதி உட்பட பல துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.அப்போது, அமெரிக்க அரசு, ‘டார்ப்’ என்ற திட்டத்தின் கீழ், பாதிப்பிற்குள்ளான நிதி நிறுவனங்களின் இடர்ப்பாட்டுக்குரிய கடன் பத்திரங்களை வாங்கிக் கொண்டது. இதனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரிச் சலுகையை இழக்க நேர்ந்தது. உயர் பொறுப்பில் உள்ளோருக்கு, ‘போனஸ்’ சலுகைகள் மறுக்கப்பட்டன.

அது போன்ற திட்டத்தை, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., விவகாரத்தில், மத்திய அரசு மேற்கொள்ளுமா என, தெரியவில்லை.அவ்வாறு செய்தால், அது, நிதிச் சந்தையின் தாக்கத்தை குறைக்க உதவும். எனினும், இத்திட்டத்திற்கு பார்லிமென்ட் அங்கீகாரம் வழங்க வேண்டும். அது, உடனடியாக நடக்குமா என, தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)