பதிவு செய்த நாள்
22 அக்2018
23:16
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பழைய கார்கள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, புதிய கார் விற்பனையுடன் ஒப்பிடும் போது, 50 சதவீதத்துக்கும் அதிகமாகும் என்கிறது, ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஆய்வறிக்கை.
இவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த நிதியாண்டில், 36 லட்சம் பயன்படுத்தப்பட்ட பழைய கார்களை விற்பனை செய்துள்ளனர், பழைய கார் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள். இதே காலகட்டத்தில், 32 லட்சம் புதிய கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
இந்த அளவுக்கு பழைய கார்கள் விற்பனை ஆவதற்கு முக்கிய காரணம், மக்களிடம் அதிகரித்து வரும் விருப்பமும், எளிதான நிதிக்கடன் வசதியும் ஆகும். மேலும், அனைத்து விதமான கார்களும் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கின்றன. கூடவே, ஆறு மாதங்களுக்கு இலவச சர்வீஸ் வசதி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி, எளிதான கடன் வசதி, எக்சேஞ்ச் வசதி என, பல கூடுதல் அம்சங்களும் கிடைக்கின்றன.
பழைய கார் விற்பனை வளர்ச்சி விகிதம், புதிய கார் விற்பனையுடன் ஒப்பிடும் போது, கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்து வருகிறது.மொத்த பழைய கார் விற்பனையில், 60 சதவீதம், ‘மாருதி ஆல்ட்டோ, வேகன் ஆர் சுவிப்ட், ஹூண்டாய் சான்ட்ரோ’ ஆகிய கார்கள் ஆகும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பழைய கார் விற்பனையில் உள்ள, ‘மகிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ்’ நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியான, அசுதோஷ் பாண்டே கூறியதாவது:எங்கள் நிறுவனத்தின் வணிகம் தற்சமயம், 40 முதல், 50 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் விற்பனை இரு மடங்காகும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|