பதிவு செய்த நாள்
22 அக்2018
23:17
மும்பை : பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், கடன் பத்திரங்கள் மற்றும் பங்கு வெளியீடுகள் மூலம், 25 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு, வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து, இவ்வங்கி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அளித்துள்ள அறிக்கை: வங்கி, 'பேசல் 3' விதிமுறைப்படி, மூலதன ஆதாய இருப்பை பராமரிக்கும் நோக்கில், 5,000 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வெளியிட, இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாடு அல்லது வெளிநாட்டில், பொதுவாகவோ அல்லது தனிப்பட்ட ஒதுக்கீடு மூலமாகவோ, இந்த கடன் பத்திரங்கள் வெளியிடப்படும்.இது தவிர, தொடர் பங்கு வெளியீடு, தகுதியுள்ள நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு, முன்னுரிமை பங்குகள் அல்லது உரிமைப் பங்குகள் வெளியிடவும், வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில், இந்த வெளியீட்டின் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|