பதிவு செய்த நாள்
01 நவ2018
05:24
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., மற்றும் எச்.பி.சி.எல்., நிறுவனங்கள் இடையே, நிறுவனர் யார் என்பது தொடர்பான, ‘ஈகோ’ சண்டை தொடர்ந்து நீடிக்கிறது.
இந்தாண்டு துவக்கத்தில், எச்.பி.சி.எல்., நிறுவனத்தில், மத்திய அரசின், 51.11 சதவீத பங்குகள் அனைத்தையும், ஓ.என்.ஜி.சி., 36,915 கோடி ரூபாய்க்கு வாங்கி, பெரும்பான்மை பங்கு முதலீட்டாளராக உயர்ந்தது. அதை, எச்.பி.சி.எல்., ஏற்க மறுத்து வருகிறது. இந்நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிற்கு, இந்தாண்டு, மூன்று முறை நிதி நிலை அறிக்கைகளை அளித்துள்ளது. அவற்றில், நிறுவனர் பெயரை, ஜனாதிபதி என்றும், பங்கு மூலதனம் பூஜ்யம் என்றும் தெரிவித்துள்ளது.
‘‘பெரும்பான்மை பங்கு மூலதனம் மேற்கொண்டுள்ள, ஓ.என்.ஜி.சி.,யைத் தான், நிறுவனராக குறிப்பிட வேண்டும்,’’ என, பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியும், எச்.பி.சி.எல்., தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான, எம்.கே.சுரானா மறுத்து வருகிறார்.
‘விதிமீறலுக்காக, ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும்’ என, ஓ.என்.ஜி.சி., விடுத்த எச்சரிக்கையையும், அவர் பொருட்படுத்தவில்லை. அதனால், விரைவில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|