பதிவு செய்த நாள்
02 நவ2018
02:09
புதுடில்லி: கடந்த அக்டோபர் மாதம், ஜி.எஸ்.டி., வருவாய், 1,00,710 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது, செப்டம்பரில், 94,442 கோடி ரூபாயாக இருந்தது.
இந்தாண்டு ஏப்ரலில், முதன் முறையாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. அதன் பின், 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருந்து வந்தது.‘‘குறைந்த வரி விகிதம், அதிகமானோர் கணக்கு தாக்கல் செய்யத் துவங்கியுள்ளது, சுலபமான ஒரே வரி நடைமுறை போன்றவற்றால், ஜி.எஸ்.டி., நடைமுறை வெற்றி பெற்றுள்ளது,’’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு, ஜி.எஸ்.டி., மூலம், ஜனவரி, 86,318 கோடி ரூபாய்; பிப்ரவரி, 85,000 கோடி ரூபாய்; மார்ச், 89,264 கோடி ரூபாய்; ஏப்ரல், 1,03,458 கோடி ரூபாய்; மே, 94,016 கோடி ரூபாய்; ஜூன், 95,610 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.மேலும், ஜூலையில், 96,483 கோடி ரூபாய்; ஆகஸ்டில், 93,690 கோடி ரூபாய்; செப்டம்பரில், 94,442 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், மாதந்திர,ஜி.எஸ்.டி., வசூல் இலக்கை, 1 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|