பதிவு செய்த நாள்
02 நவ2018
23:42
சென்னை:''சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம், இரண்டாம் காலாண்டில், 167.99 கோடியாக அதிகரித்து, கடந்த ஆண்டை விட, 16 சதவீதம் உயர்ந்துள்ளது,'' என, வங்கியின் நிர்வாக இயக்குனர், என்.காமகோடி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:சிட்டி யூனியன் வங்கி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நிகர வட்டி வருவாய் 398.02 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், 354.84 கோடி ரூபாயாக இருந்தது.நிகர லாபம், 144.74 கோடி ரூபாயிலிருந்து, 167.99 கோடி ரூபாயாக அதிகரித்து, 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதே போன்று, இரண்டாவது காலாண்டில், 29 ஆயிரத்து, 785 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டு, 25 ஆயிரத்து, 389 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை விட, 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வங்கி வைப்புத் தொகையும், 30 ஆயிரத்து, 882 கோடியிலிருந்து, 34 ஆயிரத்து, 534 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.வங்கியின் மொத்த வணிகம், 56 ஆயிரத்து, 270 கோடியிலிருந்து, 64 ஆயிரத்து, 319 கோடி அதிகரித்து, 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
காசா வைப்பு தொகை வளர்ச்சி, 15 சதவீதம் உயர்ந்துள்ளது. வங்கி செயல்பாட்டு லாபம், 320.04 கோடியிலிருந்து, 295.95 கோடியாக குறைந்துள்ளது.மேலும், நிகர லாபம், கடந்த ஆண்டை விட அதிகரித்ததற்கு, வாராக் கடன் அதிகம் வசூலானது முக்கிய காரணமாகும்.செயல்பாட்டு லாபம் குறைந்ததற்கு, சந்தையில் நிலையற்ற தன்மை நிலவியது முக்கிய காரணமாகும். டிஜிட்டல் முறைக்கு மாறினாலும், வங்கி கிளைகளை, குறைக்கும் எண்ணம் இல்லை.
சிட்டி யூனியன் வங்கியின், 115வது ஆண்டு துவங்கியுள்ளது. கும்பகோணத்தில் துவங்கப்பட்ட முதல் வங்கி கிளையின், 114ம் ஆண்டு நிறுவன தினம், நவ., 1ல் கொண்டாடப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|