பதிவு செய்த நாள்
03 நவ2018
23:21
புவனேஸ்வர்:கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும், டி.எம்.டி., கம்பிகளின் தரம் குறித்த புகார் விசாரிக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மும்பையைச் சேர்ந்த, கட்டுமான துறை ஆய்வு நிறுவனமான, ‘பர்ஸ்ட் கன்ஸ்ட்ரக் ஷன் கவுன்சில்’ டி.எம்.டி., கம்பி தயாரிக்கும், 26 நிறுவனங்களின், 66 வகை கம்பிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
அதில், ‘செயில், ஆர்.ஐ.என்.எல்., டாடா ஸ்டீல், ஜே.எஸ்.பி.எல்., எலக்ட்ரோதெர்ம்’ உள்ளிட்ட, எட்டு நிறுவன தயாரிப்புகள் தவிர்த்து, இதர, 18 நிறுவனங்களின் கம்பிகள் நிர்ணயித்ததை விட, குறைவான தரத்தில் உள்ளதாக, அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட, அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு, மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது.
இந்நிலையில், தரமற்ற,டி.எம்.டி. கம்பிகள் குறித்த செய்தி, கட்டுமான துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், மத்திய உருக்கு துறை அமைச்சர், சவுத்ரி பிரேந்திர சிங், செய்தியாளர்களிடம் பேசியதாவது:டி.எம்.டி., கம்பிகள் குறித்த புகாரை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், அனைத்து நிறுவனங்களின் கம்பிகளும், இந்திய தர நிர்ணய கழகத்தின் தர நிர்ணய விதிகளின் படி தரமுடன் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து, உருக்கு துறை செயலரிடம் பேசியுள்ளேன். தேசிய தர நிர்ணய கழகம், உருக்கு அமைச்சகத்தின் கீழ் வராது. அதேசமயம், அமைச்சகம் அளிக்கும் தர நிர்ணய அளவுகோலை, அந்த அமைப்பு ஏற்று, செயல்படுத்தும். எனினும், தரமற்ற, டி.எம்.டி., கம்பிகள் குறித்த புகாரை விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மூன்றாவது இடம் இந்தியா:
உருக்கு உற்பத்தியில், மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, 10 கோடி டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டது.தேசிய உருக்கு கொள்கைப்படி, 2030 – -31ல், உருக்கு உற்பத்தியை, 30 கோடி டன்னாக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உருக்கு துறை நிறுவனங்கள் பயன் பெறும் வகையில், மத்திய அரசு, உருக்கு ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மையத்தை அமைத்துள்ளது.
சவுத்ரி பிரேந்திர சிங் மத்திய அமைச்சர், உருக்கு துறை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|