பதிவு செய்த நாள்
05 நவ2018
00:04
இந்த நிதியாண்டில்,
முன்னணி ஐ.டி., நிறுவனங்கள் அளிக்கும் வேலைவாய்ப்பு மூன்று மடங்கு
அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிதியாண்டின் முதல்
காலாண்டில், டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்.சி.எல்., ஆகிய
நான்கு முன்னணி ஐ.டி., நிறுவனங்கள் நிகர அடிப்படையில், 16 ஆயிரத்து, 500
கூடுதல் வேலைவாய்ப்பை அளித்துள்ளன. செப்டம்பர் வரையான காலாண்டில் இந்த
எண்ணிக்கை, 32 ஆயிரத்து, 502ஆக உயர்ந்துள்ளது.
இந்த போக்கு தொடர்ந்தால் இந்த
நிதியாண்டில் நான்கு முன்னணி நிறுவனங்கள் அளிக்கும் வேலைவாய்ப்பு, கடந்த
நிதியாண்டைவிட மூன்று மடங்கு அதிகரிக்கும் என,
எதிர்பார்க்கப் படுகிறது.வங்கித்துறை, நிதிச்சேவைகள் துறை மற்றும் காப்பீடு
துறையில் இருந்து தேவை அதிகரித்திருப்பது வேலை வாய்ப்பு அதிகரிப்பதற்கான
காரணமாக கருதப்படுகிறது. மேலும், திட்டங்கள் ஒதுக்கப்படாமல், இருக்கும்
காத்திருப்பு ஊழியர்கள் குறைந்திருப்பதும், புதியவர்கள் நியமிக்கப்பட ஒரு
காரணம்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|