பதிவு செய்த நாள்
06 நவ2018
02:41
புதுடில்லி, நவ. 6–செய்திகளுக்கான மொபைல், ‘ஆப்’களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ‘வீடியோ, ஷாப்பிங், கேம்ஸ்’ போன்றவற்றுக்கான மொபைல் ஆப்-களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 60 சதவீதம் அளவுக்கு, அடுத்த ஆண்டுக்குள் அதிகரிக்கும் என, ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.
‘பாக்ஸ்கான் மற்றும் மீடியாடெக்’ ஆகிய நிறுவனங்களின் முதலீட்டை கொண்டு இயங்கி வரும், ‘மொமேஜிக்’ எனும் ஆப் வினியோக நிறுவனம், மொபைல் ஆப் பயன்பாடுகள் குறித்து ஆய்வு ஒன்றை, இந்தியாவில் மேற்கொண்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஷாப்பிங், வீடியோ, விளையாட்டுகள் போன்ற பிரிவில், ஆப்-களை பயன்படுத்துவது மிகவும் அதிகரித்து வருகிறது.இதற்கு, இந்தியாவில் மொபைல் இன்டர்நெட் வேகம் அதிகரித்திருப்பதும், டேட்டாவுக்கான கட்டணங்கள் குறைந்திருப்பதும் மிக முக்கியமான காரணங்களாகும்.
மேற்சொன்ன பிரிவுகளில், அடுத்த ஆண்டுக்குள், இவற்றை உபயோகிப்போர் வளர்ச்சி, 60 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என, தெரிகிறது.மேலும், 20 லட்சம் மொபைல் போன் உபயோகிப்பாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி செய்திகள் குறித்த ஆப்-களுக்கான தேவை, 94 சதவீதம் அதிகரித்துள்ளது.அடுத்து, ‘சோஷியல் நெட்வொர்க்’ சம்பந்தமான ஆப்களுக்கான தேவை, 80 சதவீதமாக இருக்கிறது.விளையாட்டுகளுக்கான ஆப் தேவை, 52 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலகட்டத்தோடு, இந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது தெரியவந்துள்ளது.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்து, ‘மொமேஜிக் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, அருண் குப்தா கூறியதாவது:மிகப் பெரும் அளவில், செய்திகள் குறித்த உள்ளடக்கங்களை உருவாக்கும் நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. சுமார், ௧௦ மொழிகளில், பலதரப்பட்ட வயது கொண்டோர் இதைப் பயன்படுத்துகிறனர். செய்திகள் குறித்த ஆப்-கள், மேலும் மிகப் பெரும் வளர்ச்சி பெறும் என தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|