பதிவு செய்த நாள்
06 நவ2018
02:43
புதுடில்லி:சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், வசதி இருந்தும் கடனை திரும்பச் செலுத்தாதோர் பட்டியலை தர மறுப்பது ஏன் என, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு, மத்திய தகவல் ஆணையம், விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.வங்கிகளில், 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, வசதி இருந்தும் அக்கடனை திரும்பத் தராதோர் பட்டியலை வழங்குமாறு, ரிசர்வ் வங்கியிடம், மத்திய தகவல் ஆணையம் கோரியிருந்தது.
அதற்கு, வங்கி தகவல் பாதுகாப்பு தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு வழங்கியுள்ள, விதிவிலக்கை சுட்டிக் காட்டி, தகவல் தர, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.இதையடுத்து, மத்திய தகவல் ஆணையம், ரிசர்வ் வங்கிக்கு, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த தன் கொள்கையை, வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், அதற்கு சற்றும் பொருந்தாத விளக்கத்தை, ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர் ஆகியோர் அளிக்கின்றனர்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஜெயந்திலால் தாக்கல் செய்த மனு மீது, மத்திய தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர், சைலேஷ் காந்தி பிறப்பித்த உத்தரவு செல்லும் என, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.
அதை மதிக்காமல், வசதி இருந்தும் வாராக் கடன் செலுத்தாதோர் பட்டியலை தராமல் உள்ளதற்கு, அதிகபட்ச அபராதம் ஏன் விதிக்கக் கூடாது என்பதை, ரிசர்வ் வங்கி விளக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பிரதமர் அலுவலகத்திற்கும்...வாராக் கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தை, பகிரங்கமாக வெளியிடுமாறு, பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு, மத்திய தகவல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|