செய்தி, ‘ஆப்’களுக்கு சிறந்த எதிர்காலம் செய்தி, ‘ஆப்’களுக்கு சிறந்த எதிர்காலம் ...  சேவைகள் துறையில், ‘சூப்பர்’ வளர்ச்சி சேவைகள் துறையில், ‘சூப்பர்’ வளர்ச்சி ...
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு சி.ஐ.சி., நோட்டீஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2018
02:43

புதுடில்லி:சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், வசதி இருந்தும் கடனை திரும்பச் செலுத்தாதோர் பட்டியலை தர மறுப்பது ஏன் என, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு, மத்திய தகவல் ஆணையம், விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.வங்கிகளில், 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, வசதி இருந்தும் அக்கடனை திரும்பத் தராதோர் பட்டியலை வழங்குமாறு, ரிசர்வ் வங்கியிடம், மத்திய தகவல் ஆணையம் கோரியிருந்தது.
அதற்கு, வங்கி தகவல் பாதுகாப்பு தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு வழங்கியுள்ள, விதிவிலக்கை சுட்டிக் காட்டி, தகவல் தர, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.இதையடுத்து, மத்திய தகவல் ஆணையம், ரிசர்வ் வங்கிக்கு, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த தன் கொள்கையை, வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், அதற்கு சற்றும் பொருந்தாத விளக்கத்தை, ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர் ஆகியோர் அளிக்கின்றனர்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஜெயந்திலால் தாக்கல் செய்த மனு மீது, மத்திய தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர், சைலேஷ் காந்தி பிறப்பித்த உத்தரவு செல்லும் என, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.
அதை மதிக்காமல், வசதி இருந்தும் வாராக் கடன் செலுத்தாதோர் பட்டியலை தராமல் உள்ளதற்கு, அதிகபட்ச அபராதம் ஏன் விதிக்கக் கூடாது என்பதை, ரிசர்வ் வங்கி விளக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பிரதமர் அலுவலகத்திற்கும்...வாராக் கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தை, பகிரங்கமாக வெளியிடுமாறு, பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு, மத்திய தகவல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)