சேவைகள் துறையில், ‘சூப்பர்’ வளர்ச்சி சேவைகள் துறையில், ‘சூப்பர்’ வளர்ச்சி ... தீபாவளியை முன்னிட்டு முகூர்த்த வர்த்தகம் துவக்கம் தீபாவளியை முன்னிட்டு முகூர்த்த வர்த்தகம் துவக்கம் ...
உலக முதலீட்டாளர்கள் மாநாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2018
02:46

– நமது நிருபர் –‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க, 1,500 பிரதிநிதிகள் இதுவரை பதிவு செய்துள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், வரும் ஜன., 23, 24ம் தேதிகளில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நடைபெறுகிறது; இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இம்மாநாட்டில் பங்கேற்க விரும்பும் நிறுவன பிரதிநிதிகள், பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட நிறுவன பிரதிநிதிகள் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:வரும், 2019 ஜனவரியில் நடைபெற உள்ள இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க, நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.இதற்கு, www.tngim.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், இதற்கான முன்பதிவு ஒரு மாதத்துக்கு முன்பே துவங்கி விட்டது.இதில், ஜப்பான், அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், இதுவரை பதிவு செய்துஉள்ளனர்.முதல் மாநாட்டில், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், இதை விட அதிக பிரதிநிதிகள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)