பதிவு செய்த நாள்
06 நவ2018
02:46
– நமது நிருபர் –‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க, 1,500 பிரதிநிதிகள் இதுவரை பதிவு செய்துள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், வரும் ஜன., 23, 24ம் தேதிகளில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நடைபெறுகிறது; இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இம்மாநாட்டில் பங்கேற்க விரும்பும் நிறுவன பிரதிநிதிகள், பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட நிறுவன பிரதிநிதிகள் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:வரும், 2019 ஜனவரியில் நடைபெற உள்ள இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க, நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.இதற்கு, www.tngim.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், இதற்கான முன்பதிவு ஒரு மாதத்துக்கு முன்பே துவங்கி விட்டது.இதில், ஜப்பான், அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், இதுவரை பதிவு செய்துஉள்ளனர்.முதல் மாநாட்டில், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், இதை விட அதிக பிரதிநிதிகள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|