ரூ.19 கோடி தான் உள்ளது: ஆர்காம் நிறுவனம் தகவல் ரூ.19 கோடி தான் உள்ளது: ஆர்காம் நிறுவனம் தகவல் ...  ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா? ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா? ...
கார் விற்பனை மந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2018
01:02

மும்பை: முன் எப்போதையும் விட இந்த பண்டிகை காலத்தில், வாகன விற்பனை மந்தமாக இருக்கிறது. தீபாவளியை அடுத்து கிறிஸ்துமஸ் புத்தாண்டு என, பண்டிகைகள் இருந்தாலும், வாகன விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்பதால், பல நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து வருகின்றன.நாட்டின், டாப், 10 கார் தயாரிப்பு நிறுவனங்கள், 70 ஆயிரம் முதல், 85 ஆயிரம் கார்கள் அளவுக்கு கார் உற்பத்தியை நவம்பர் மாதத்தில் குறைத்துவிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்த மாதாந்திர கார் தயாரிப்பில் 25 சதவீதம் ஆகும்.மாருதி சுசூகி, டொயோட்டா கிர்லோஸ்கர், போர்டு இந்தியா ஆகிய நிறுவனங்கள், இந்த மாதத்தில் தீபாவளி மற்றும் வாராந்திர விடுமுறைகளை சேர்த்து, மொத்தம், 10 நாட்களுக்கு மேலாக, ஆலைக்கு விடுமுறை வழங்க இருப்பதாக தெரிகிறது.மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹோண்டா கார்ஸ் இந்தியா மற்றும் ரெனால்ட் நிஸான் ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள், தீபாவளியை முன்னிட்டு, 5 – 6 நாட்கள் தயாரிப்பு பணிகளை நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்ஸ்வேகன் நிறுவனம் நவம்பர், 2 முதல், 19 வரை உற்பத்தியை நிறுத்தி வைக்க இருப்பதாக தெரிகிறது.வழக்கமாக, பண்டிகை காலத்தை முன்னிட்டு, சில நாட்கள் உற்பத்தியை நிறுத்தி வைப்பது வாடிக்கையான ஒன்றுதான். என்றாலும், இம்முறை அதிக நாட்கள் நிறுத்தி வைப்பது கவனிக்கத்தக்கது.இதுகுறித்து நிறுவனங்கள் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், இத்துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இரு மாதங்களாக, வாகன விற்பனை குறைந்து வருகிறது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு, வட்டிவிகித உயர்வு, காப்பீட்டு தொகை உயர்வு ஆகியவை, மிக முக்கியமான காரணங்கள் ஆகும்.தீபாவளிக்கு முந்தைய வாரத்தில், கார்கள் விற்பனை, 10 முதல், 25 சதவீதம் அளவுக்கு குறைவாக இருந்தது. இதையடுத்து இதற்கு முன் இல்லாத அளவுக்கு, தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்க வேண்டிய நிலைக்கு, கார் தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், ஓர் அளவுக்கு மேல் சலுகைகள் தந்தால், அது நிறுவனத்தின் வருமானத்தை பாதிக்கும். எனவே, இருக்கும் தேவைக்கு ஏற்ப, கார் உற்பத்தியை குறைக்கும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)