ஒரு நாள் விற்பனை மிரட்டும் அலிபாபா ஒரு நாள் விற்பனை மிரட்டும் அலிபாபா ...  பணமதிப்பு நீக்கம் – ஜி.எஸ்.டி.,யால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: ரகுராம் ராஜன் பணமதிப்பு நீக்கம் – ஜி.எஸ்.டி.,யால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: ரகுராம் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆயுள் காப்பீட்டுதாரர் வாரிசுகளுக்கு, ‘ஜாக்பாட்’:கோரப்படாத ரூ.15,000 கோடி கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2018
23:41

புதுடில்லி:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், தங்களிடம் உள்ள கோரப்படாத தொகையை, சம்பந்தப்பட்ட காப்பீட்டுதாரர்களுக்கோ அல்லது அவர்களின் வாரிசுகளுக்கோ வழங்குமாறு, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், கோரப்படாத காப்பீட்டு தொகை குறித்த விபரங்களை, ஆண்டுக்கு இரு முறை, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்குகின்றன. அதன்படி, இந்தாண்டு, மார்ச், 31 வரை, 23 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம், 15,166 கோடி ரூபாய், காப்பீட்டுதாரர்களால், கோரப்படாமல் உள்ளது. இதில், பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி.,யிடம் மட்டும், 10,509 கோடி ரூபாய் உள்ளது.


தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம், 4,657 கோடி ரூபாய் தேங்கியுள்ளது. இத் தொகையை, காப்பீட்டுதாரர்கள் அல்லது அவர்களின் வாரிசுகளை தேடிக் கண்டுபிடித்து, வழங்குமாறு, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.புதிய வசதிமேலும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் வலைதளத்தில், ‘தேடுதல்’ என்ற பிரிவை சேர்க்குமாறும் தெரிவித்து உள்ளது.


இப்பிரிவில், ஆயுள் காப்பீட்டுதாரர்களின், ‘ஆதார், பான்’ போன்ற விபரங்களை தெரிவித்து, அந்த கணக்கில் உள்ள கோரப்படாத தொகையை, அவர்களோ அல்லது வாரிசுதாரர்களோ, அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த, உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில், காப்பீட்டு தொகை கோரப்படாமல் உள்ளது.


இதற்கு, காப்பீட்டுதாரர் மறைவு, காணாமல் போவது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஓய்வூதிய திட்டங்களில், ஒருசிலரின் கணக்கில் உள்ள தொகை, காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து, மாதாந்திர ஓய்வூதியம் வாங்கும் அளவிற்கு, போதாத அளவிற்கும் இருக்கலாம். இந்த வகையில், கோரப்படாத தொகையை திரும்ப அளிக்க எடுத்துள்ள நடவடிக்கை, வரவேற்கத்தக்கது. இதனால், காப்பீட்டுதாரர்களின் வாரிசுகள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)