ஒரு நாள் விற்பனை மிரட்டும் அலிபாபா ஒரு நாள் விற்பனை மிரட்டும் அலிபாபா ...  ரெடியா இருங்க ரெடியா இருங்க ...
பணமதிப்பு நீக்கம் – ஜி.எஸ்.டி.,யால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: ரகுராம் ராஜன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2018
23:44

வாஷிங்டன்:‘‘பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அமல் ஆகிய நடவடிக்கைகளால், 2017ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது,’’ என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.அவர், அமெரிக்காவில், கலிபோர்னியா பல்கலையில் உரையாற்றியதாவது:


கடந்த, 2012 –- 16 வரை, இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி கண்டது. ஆனால், சர்வதேச பொருளாதாரம் வளர்ச்சி பெறும்போது, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., என்ற இரண்டு நடவடிக்கைகள், நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கற்களாக அமைந்து விட்டன.தற்போது, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி காணத் துவங்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அதை தடுக்கும் வகையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.


எனினும், தற்போதைய, 7 சதவீத பொருளாதார வளர்ச்சி குறையும்பட்சத்தில், ஏதோ தவறு நடக்கிறது எனலாம். ஆனால், இந்த வளர்ச்சி கூட போதாது.ஏனெனில், பெருகி வரும் தொழிலாளர்களை சமாளிக்க, மாதம்,10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க பட வேண்டும்.


வங்கிகளின் வாராக் கடனுக்கு, திவால் சட்டம் மட்டுமே தீர்வளிக்காது. வேறு சில வழி களையும் ஆராய வேண்டும்.இந்தியாவுக்கு, மூன்று முக்கிய பிரச்னைகள் உள்ளன. முதலாவ தாக, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். சீரற்ற மின்துறையை குறுகிய காலத்தில் சீர்படுத்தி, உற்பத்தியாகும் மின்சாரம், மக்களுக்கே கிடைக்குமாறு செய்ய வேண்டும்.


மூன்றாவதாக, வங்கித் துறையை சுத்தப்படுத்த வேண்டும்.இத்தகைய நடவடிக்கைகள், நாட்டின் வளர்ச்சியை மேலும் முன்னெடுத்துச் செல்ல உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)