பதிவு செய்த நாள்
13 நவ2018
00:23
புதுடில்லி, நவ. 13–‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த, ‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ வாகனங்களின் விற்பனை, அக்டோபர் மாதத்தில் சரிவை சந்தித்ததால், அந்நிறுவன பங்குகள் விலை, 5 சதவீதம் அளவுக்கு சரிந்தது.இருப்பினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உலகளவிலான விற்பனை, 5.62 சதவீதம் அளவுக்கு, அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
இது குறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாவது:நிறுவனத்தின், ஜாகுவார் லேண்டு ரோவர் விற்பனையையும் சேர்த்து மொத்தம், 1 லட்சத்து, 9 ஆயிரத்து, 597 வாகனங்கள் அக்டோபர் மாதத்தில் விற்பனை ஆகியுள்ளன.இதுவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், மொத்தம், 1 லட்சத்து, 3 ஆயிரத்து, 761 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.நிறுவனத்தின் அனைத்து பயணியர் வாகனத்தின் உலகளாவிய மொத்த விற்பனை, அக்டோபர் மாதத்தில், 65 ஆயிரத்து, 217 வாகனங்கள் ஆகும்.
இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு அக்டோபரில், 66 ஆயிரத்து, 361 வாகனங்கள் விற்பனையாகின.வர்த்தக வாகனங்களை பொறுத்தவரை, அக்டோபரில், 44 ஆயிரத்து, 380 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.
இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 19 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.இருப்பினும், ஜாகுவார் லேண்டு ரோவர் சில்லரை விற்பனை, அக்டோபர் மாதத்தில், 4.6 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள், இந்திய பங்குச் சந்தைகளில், 5 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|