பதிவு செய்த நாள்
13 நவ2018
23:40
புதுடில்லி:தீபாவளி பண்டிகை கால விற்பனை முடிந்ததால், பல நிறுவனங்கள், ‘ஸ்மார்ட் போன்’ விலையை உயர்த்தத் துவங்கியுள்ளன.
அக்டோபரில், தீபாவளி பண்டிகையையொட்டி, வலைதள சந்தை நிறுவனங்களும், மொபைல் போன் விற்பனையகங்களும் போட்டி போட்டு, தள்ளுபடி சலுகைகள் மூலம் மொபைல் போன்களை விற்பனை செய்து, கையிருப்பை வெகுவாக குறைத்துக் கொண்டன. இதையடுத்து, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கணக்கிட்டு, புதிய ஸ்மார்ட் போன்கள் விலையை, ‘சயோமி, ரியல் மி’ ஆகியவை உயர்த்தின.
இதைத் தொடர்ந்து, ‘சாம்சங், ஓப்போ, விவோ’ உட்பட, மேலும் பல நிறுவனங்கள், ஸ்மார்ட் போன் விலையை உயர்த்த உள்ளன.இந்தாண்டு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதனால், புதிய ஸ்மார்ட் போன்கள் விலை, 5 – -8 சதவீதம் உயர்த்தப்படும் என, தெரிகிறது.
சமீபத்தில், சயோமி நிறுவனம், ‘ரெட்மி 6 – 6ஏ’ ஸ்மார்ட் போன்கள் விலையை, வெளியிட்ட சில நாட்களில், தலா, 600 ரூபாய் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.அடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என, வரிசையாக விழாக்கள் வருவதால், விலை உயர்வால் விற்பனை பாதிக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|