பதிவு செய்த நாள்
13 நவ2018
23:46
வாழப்பாடி:‘புதிதாக தொழில் துவங்குவோர், 10 சதவீத தொகையை முதலீடு செய்தால் போதும்,’’ என, கோவை, பொது சேவா மைய இணை இயக்குனர், சதீஷ்குமார் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட தொழில் மையம் மற்றும் பொது சேவா மையம் இணைந்து, வாழப்பாடி அருகே, பேளூரில், புதிதாக தொழில் துவங்க விரும்புவோருக்கு, சிறப்பு வழிகாட்டல் கருத்தரங்கை, நேற்று நடத்தியது. நகர கூட்டுறவு வங்கி தலைவர், வெங்கடேசன் தலைமை வகித்தார். அதில், கோவை, பொது சேவா மைய இணை இயக்குனர், சதீஷ்குமார் பேசியதாவது:
புதிதாக தொழில் துவங்குபவர்கள், முதலீடாக, 10 சதவீத தொகை வைத்திருந்தால் போதும். மீதி, 80 சதவீதம் மத்திய அரசிடமிருந்தும், 10 சதவீதம் மாநில அரசிடமிருந்தும் மானிய தொகையாக கிடைக்கும். முதல்கட்டமாக, 20 பேரிலிருந்து, 50 பேர் வரை கூட குழுவாக இணையலாம்.பொதுவான ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கு கட்டட வசதியுடன் கூடிய தொழில் துவங்க வேண்டும்.
உதாரணமாக, தென்னை சார்ந்த உபதொழில்களை மேம்படுத்த, குழுவாக இணைந்து செயல் பட்டு தொழில் துவங்க, எங்களை அணுகினால், உரிய வசதிகளை செய்து தருவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|