பதிவு செய்த நாள்
13 நவ2018
23:55
சேலம்:தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், சர்க்கரை விலை சரியும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வட மாநில வரத்தில் சரிவு ஏற்பட்டதால், விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்துக்கு தேவையான சர்க்கரை, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், குஜராத் மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. கடந்த, 6ல், தீபாவளி பண்டிகையால், தேவை அதிகரித்து, அக்., 29ல், கிலோ, 34 ரூபாய்க்கு விற்ற சர்க்கரை, 2 ரூபாய் உயர்ந்தது. பண்டிகை முடிந்த நிலையில், சர்க்கரை விலை சரியும் என, வியாபாரிகள், மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், வட மாநில சர்க்கரை வரத்து, தொடர்ந்து சரிந்ததால், நேற்று கிலோவுக்கு, 2 ரூபாய் உயர்ந்தது. முண்டியம்பாக்கம், முதல் ரகம் கிலோ, 42க்கு விற்றது, 44 ரூபாய்; இரண்டாம் ரகம், 40க்கு விற்றது, 42 ரூபாயாக உயர்ந்தது.
மஹாராஷ்டிரா சர்க்கரை, முதல் ரகம், 36க்கு விற்றது, 38 ரூபாய்; இரண்டாம் ரகம், 34க்கு விற்றது, 36 ரூபாயாக உயர்ந்தது. உத்தரகண்ட் சர்க்கரை, முதல் ரகம், 33க்கு விற்றது, 35 ரூபாய்; இரண்டாம் ரகம், 30க்கு விற்றது, 32 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|