கட்டமைப்பு வசதியால் நாடு வளர்ச்சியடையும்:மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு, ‘அசோசெம்’ பாராட்டு கட்டமைப்பு வசதியால் நாடு வளர்ச்சியடையும்:மோடியின் தொலைநோக்கு ... ...  இந்தியர்கள் பேச்சில் வல்லவர்கள் டொனால்டு டிரம்ப் புகழாரம் இந்தியர்கள் பேச்சில் வல்லவர்கள் டொனால்டு டிரம்ப் புகழாரம் ...
மத்திய அரசு – ரிசர்வ் வங்கி பிரச்னைகளில் சுமுக தீர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2018
23:14

புதுடில்லி:மத்திய அரசு – ரிசர்வ் வங்கி இடையிலான மோதலுக்கு முடிவு காணப்பட்டு, முக்கிய பிரச்னைகளில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் விருப்பத்தின் பேரில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் விதிமுறைகளை தளர்த்த, ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டுஉள்ளதாக தெரிகிறது.பணப்புழக்க பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு உள்ள, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான சிறப்பு திட்டத்தை, ரிசர்வ் வங்கி அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், 11 வங்கிகள் மீதான, தீவிர கண்காணிப்பு விதிமுறையை தளர்த்த வேண்டும் என்ற, மத்திய அரசின் கோரிக்கையை, ரிசர்வ் வங்கி, 19ம் தேதி நடைபெறும் இயக்குனர் குழு கூட்டத்தில் பரிசீலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.விதிகளை தளர்த்தினால், இவ்வங்கிகளும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு கடன் வழங்க முடியும்.


இத்துறை, 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இத்துறை, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப, தாராளமாக கடன் வழங்குவது அவசியம் என, மத்திய அரசு கருதுகிறது.இது தொடர்பாக, ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், முடிவுக்கு வந்து, சுமுக சூழலுக்கான அறிகுறி தோன்றியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)