இந்தியர்கள் பேச்சில் வல்லவர்கள் டொனால்டு டிரம்ப் புகழாரம் இந்தியர்கள் பேச்சில் வல்லவர்கள் டொனால்டு டிரம்ப் புகழாரம் ...  ஊட்டி பூங்காவில் நறுமண பொருள் ஊட்டி பூங்காவில் நறுமண பொருள் ...
வர்த்தகம் » ஜவுளி
ரேமண்ட் நிறுவன தலைவர் சிங்கானியா பதவி விலகல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2018
23:21

மும்பை:ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ரேமண்ட் அப்பேரல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து, கவுதம் சிங்கானியா விலகியுள்ளார்.


இவருக்கு பதிலாக, நிர்விக் சிங் என்பவர் செயல்சாரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர் பொறுப்பிலிருந்து கவுதம் சிங்கானியா விலகினாலும், கம்பெனியின் இயக்குனர் குழுவில் தொடர்ந்து இருப்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்விக் சிங்குடன், அன்ஷு சரின் மற்றும் கவுதம் திரிவேதி ஆகியோரும் ரேமண்ட் அப்பேரல் நிறுவனத்தில் செயல்சாரா இயக்குனர்களாக பதவி ஏற்றுள்ளனர்.


இது குறித்து சிங்கானியா கூறியுள்ளதாவது:தரமிக்க நிர்வாகத்தை அமைப்பதிலும், தொழிலை திறனுடன் அணுகுவதிலும் எப்போதுமே நம்பிக்கை கொண்டவனாக இருப்பவன் நான்.நிர்விக் சிங் செயல் சாரா தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவரது தலைமையின் கீழ் நிறுவனம் சிறப்பான வளர்ச்சி காணும் என, உறுதியாக எண்ணுகிறேன். அன்ஷு சரின் மற்றும் கவுதம் திரிவேதி ஆகியோரையும் வரவேற்கிறேன்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.


கடந்த சில ஆண்டுகளாகவே, கவுதம் சிங்கானியாவின் தந்தை, விஜய்பாத் சிங்கானியா, மகன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.தன்னுடைய சொத்துகளை எல்லாம் பெற்றதும், தன்னை கைவிட்டுவிட்டதாகவும் புகார் கூறி வந்தார்.அண்மையில், நிர்வாக குழு கூட்டங்களுக்கு தன்னை அழைப்பதில்லை என, விஜய்பாத் சிங்கானியா புகார் கூறி கடிதங்கள் எழுதிய நிலையில்,கடந்த மாதம்,ரேமண்ட் நிறுவனத்தின்,கவுரவ தலைவர் பொறுப்பிலிருந்து, விஜய்பாத் சிங்கானியா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)