பதிவு செய்த நாள்
14 நவ2018
23:21
மும்பை:ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ரேமண்ட் அப்பேரல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து, கவுதம் சிங்கானியா விலகியுள்ளார்.
இவருக்கு பதிலாக, நிர்விக் சிங் என்பவர் செயல்சாரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர் பொறுப்பிலிருந்து கவுதம் சிங்கானியா விலகினாலும், கம்பெனியின் இயக்குனர் குழுவில் தொடர்ந்து இருப்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்விக் சிங்குடன், அன்ஷு சரின் மற்றும் கவுதம் திரிவேதி ஆகியோரும் ரேமண்ட் அப்பேரல் நிறுவனத்தில் செயல்சாரா இயக்குனர்களாக பதவி ஏற்றுள்ளனர்.
இது குறித்து சிங்கானியா கூறியுள்ளதாவது:தரமிக்க நிர்வாகத்தை அமைப்பதிலும், தொழிலை திறனுடன் அணுகுவதிலும் எப்போதுமே நம்பிக்கை கொண்டவனாக இருப்பவன் நான்.நிர்விக் சிங் செயல் சாரா தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவரது தலைமையின் கீழ் நிறுவனம் சிறப்பான வளர்ச்சி காணும் என, உறுதியாக எண்ணுகிறேன். அன்ஷு சரின் மற்றும் கவுதம் திரிவேதி ஆகியோரையும் வரவேற்கிறேன்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, கவுதம் சிங்கானியாவின் தந்தை, விஜய்பாத் சிங்கானியா, மகன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.தன்னுடைய சொத்துகளை எல்லாம் பெற்றதும், தன்னை கைவிட்டுவிட்டதாகவும் புகார் கூறி வந்தார்.அண்மையில், நிர்வாக குழு கூட்டங்களுக்கு தன்னை அழைப்பதில்லை என, விஜய்பாத் சிங்கானியா புகார் கூறி கடிதங்கள் எழுதிய நிலையில்,கடந்த மாதம்,ரேமண்ட் நிறுவனத்தின்,கவுரவ தலைவர் பொறுப்பிலிருந்து, விஜய்பாத் சிங்கானியா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|