பதிவு செய்த நாள்
14 நவ2018
23:23
ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலைத் துறை சார்பில், முதல் முறையாக நறுமண பொருட்கள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாவது சீசனை முன்னிட்டு, தற்போது சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இங்கு, தற்போது நறுமண பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் நறுமண பொருட்களான கிராம்பு, ஏலக்காய், குறுமிளகு உள்ளிட்ட பொருட்கள், பூங்கா வளாகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து நறுமண பொருட்களும் உள்ள பெட்டி, 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர், சிவசுப்ரமணிய சாம்ராஜ் கூறியதாவது:தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை உத்தரவுப்படி, தாவரவியல் பூங்காவில், முதல் முறையாக நறுமண பொருட்கள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியரின் தேவைக்கேற்ப தயார் செய்து விற்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|