பதிவு செய்த நாள்
15 நவ2018
10:33
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாகவும், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து அதிகரித்திருப்பதாலும் இந்திய ரூபாய் மதிப்பு ஏற்றத்துடன் காணப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (நவ.,15 காலை 9.15 மணி நிலவரம்) இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து 72.07 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் ஏற்றுமதியாளர்கள் டாலரை அதிகம் விற்றதாலும், மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பு சரிவுடன் காணப்படுவதாலும் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி இருப்பதும் ரூபாய் மதிப்பின் உயர்விற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாய் மதிப்பு 72.31 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|