பதிவு செய்த நாள்
15 நவ2018
23:47
புதுடில்லி:‘‘நாட்டில், ஏழ்மையை ஒழிக்க, அதிக வளர்ச்சி விகிதம் அவசியம் என்பதுடன், அதனால் விளையும் பயன்கள், ஏழை மக்களை சென்றடையுமாறு பார்த்துக் கொள்வதும் முக்கியம்,’’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில், சேமிப்பு மற்றும் சில்லரை வங்கிகளின் சர்வதேச மாநாட்டில் மேலும் பேசியதாவது:உலகம் முழுவதிலும், நம்மை போன்ற வளரும் நாடுகளுக்கு, பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக தேவைப்படுகிறது.இந்த வளர்ச்சி, அதிகபட்ச ஏழைகளை வறுமையில் இருந்து மீட்கவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பயன்பட வேண்டும் என்பதே அரசின் விருப்பமாகும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒரே நோக்கம், வங்கி சேவை கிடைக்காத வர்களுக்கு வங்கி சேவை; பாதுகாப்பற்ற வாழ்க்கை சூழலுக்கு பாதுகாப்பு அளிப்பது; நிதியுதவி கிடைக்காதோருக்கு நிதியுதவி; சேவைகள் கிடைக்காத இடத்தில், சேவைகள் கிடைக்கச் செய்வது ஆகியவை தான்.இந்த நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, பிரதமரின், ‘அனைவருக்கும் வங்கி கணக்கு’ திட்டத்தில், இன்று, 33 கோடி பேருக்கு, வங்கி சேவை கிடைத்துள்ளது; 1.41 கோடி பேருக்கு, ஆண்டுக்கு, 12 ரூபாய்க்கு, 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.‘அடல் ஓய்வூதிய திட்டம்’ 60 வயதுக்குப் பிறகு, ஓய்வூதியம் பெற வகை செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|