தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ...  விமானத்தில் 45 டன் சரக்குகள்  ஜெட் ஏர்வேஸ் சாதனை விமானத்தில் 45 டன் சரக்குகள் ஜெட் ஏர்வேஸ் சாதனை ...
ஏழ்மையை ஒழிக்க அதிக வளர்ச்சி விகிதம் தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2018
23:47

புதுடில்லி:‘‘நாட்டில், ஏழ்மையை ஒழிக்க, அதிக வளர்ச்சி விகிதம் அவசியம் என்பதுடன், அதனால் விளையும் பயன்கள், ஏழை மக்களை சென்றடையுமாறு பார்த்துக் கொள்வதும் முக்கியம்,’’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


அவர், டில்லியில், சேமிப்பு மற்றும் சில்லரை வங்கிகளின் சர்வதேச மாநாட்டில் மேலும் பேசியதாவது:உலகம் முழுவதிலும், நம்மை போன்ற வளரும் நாடுகளுக்கு, பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக தேவைப்படுகிறது.இந்த வளர்ச்சி, அதிகபட்ச ஏழைகளை வறுமையில் இருந்து மீட்கவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பயன்பட வேண்டும் என்பதே அரசின் விருப்பமாகும்.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒரே நோக்கம், வங்கி சேவை கிடைக்காத வர்களுக்கு வங்கி சேவை; பாதுகாப்பற்ற வாழ்க்கை சூழலுக்கு பாதுகாப்பு அளிப்பது; நிதியுதவி கிடைக்காதோருக்கு நிதியுதவி; சேவைகள் கிடைக்காத இடத்தில், சேவைகள் கிடைக்கச் செய்வது ஆகியவை தான்.இந்த நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, பிரதமரின், ‘அனைவருக்கும் வங்கி கணக்கு’ திட்டத்தில், இன்று, 33 கோடி பேருக்கு, வங்கி சேவை கிடைத்துள்ளது; 1.41 கோடி பேருக்கு, ஆண்டுக்கு, 12 ரூபாய்க்கு, 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.‘அடல் ஓய்வூதிய திட்டம்’ 60 வயதுக்குப் பிறகு, ஓய்வூதியம் பெற வகை செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)