பதிவு செய்த நாள்
15 நவ2018
23:53
சென்னை:மும்பையிலிருந்து லண்டனுக்கு, போயிங் 777 – 300இ.ஆர்., விமானத்தில், 45 டன் சரக்கு கொண்டு சென்று, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் புதிய சாதனை செய்துள்ளது.
இது குறித்து, இந்தநிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சர்வதேச விமான சேவையில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஜெட் ஏர்வேஸ் உள்ளது. இந்திய விமான நிறுவனமான இது, ஒரே விமானத்தில் அதிகமான சரக்குகளை முதல் முறையாக கையாண்டுள்ளது.மும்பையிலிருந்து லண்டனுக்கு, போயிங் 777 – 300இ.ஆர்., சரக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.
இந்த விமானத்தில் முதல் முறையாக, 45 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இதில், காய்கறிகள், பழங்கள், பொறியியல் இயந்திரங்கள், ஜவுளிகள், தோல் பொருட்கள் போன்றவை கொண்டு செல்லப்பட்டன.இதற்கு முன், வெளிநாட்டு விமான நிறுவனங்கள், 40 டன் சரக்குகளை மட்டுமே கையாண்டுள்ளன.
விமானத்தில் சரக்குகள் கொண்டு செல்வதன் மூலம், மூன்று ஆண்டுகளில், 15 சதவீதம் வருவாய் நிறுவனத்துக்கு அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|