முத­லீட்­டின் முழு பலனை பெற  தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்முத­லீட்­டின் முழு பலனை பெற தவிர்க்க வேண்­டிய தவ­று­கள் ...  பண்டிகை கடனிலிருந்து மீளும் வழிகள் பண்டிகை கடனிலிருந்து மீளும் வழிகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
யெஸ் பேங்க் தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா:என்.எஸ்.இ.,யில் இருந்தும் வெளியேறுவார்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2018
23:57

மும்பை:ஏர்செல் – மேக்சிஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, அசோக் சாவ்லா, யெஸ் பேங்க் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.இதையடுத்து அவர், தேசிய பங்குச் சந்தையான – என்.எஸ்.இ., தலைவர் பொறுப்பில் இருந்தும் வெளியேறுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


ஏர்செல் – மேக்சிஸ் ஊழல் வழக்கில், சி.பி.ஐ., ஜூலை, 19ல், கூடுதல் குற்றப்பத்திரிகையை தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், அசோக் சாவ்லா உள்ளிட்ட, 18 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த வழக்கு, அக்., 1ல், சிறப்பு, சி.பி.ஐ., நீதிபதி, ஓ.பி.சைனி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, சாவ்லா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிய, நவ., 26க்குள், மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் என, சி.பி.ஐ.,க்கு நீதிபதி உத்தரவிட்டார்.


இந்த கெடு முடிய, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அசோக் சாவ்லா, யெஸ் பேங்க் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.நீடிக்க முடியாதுஅத்துடன், என்.எஸ்.இ., தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.ரிசர்வ் வங்கி மற்றும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளின்படி, குற்றச்சாட்டுக்கு ஆளானோர் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டோர், பதவியில் நீடிக்க முடியாது.


ஆனால் சாவ்லா, தன் மீது வழக்கு பதிய, மத்திய அரசு அனுமதி அளிக்கும் முன், பதவி விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக, யெஸ் பேங்க் இயக்குனர் குழு அறிவித்துள்ளது.ஏற்கனவே, யெஸ் பேங்க் தலைமை செயல் அதிகாரி, ராணா கபூருக்கு பதவி நீட்டிப்பு அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்ததால், அவர், 2019 ஜனவரியில், பதவி விலக உள்ளார். அவருக்கு மாற்றாக, புதிய தலைமை செயல் அதிகாரியை தேடும் பணியில், யெஸ் பேங்க் ஈடுபட்டுள்ளது.


இந்நிலையில், தலைவர் பொறுப்பிற்கும் புதிய நபரை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.புதிய தலைவர்யெஸ் பேங்க்கில் இருந்து, அதன், ‘ஆடிட்’ குழு தலைவர், வசந்த் குஜ்ராதியும் ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைவராக, இந்திய பட்டய கணக்காளர் மையத்தின் முன்னாள் தலைவர், உத்தம் பிரகாஷ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)