கூகுள் கிளவுட் சி.இ.ஓ., தாமஸ் குரியன் நியமனம் கூகுள் கிளவுட் சி.இ.ஓ., தாமஸ் குரியன் நியமனம் ...  ‘போஸ்ட் பெய்டு’ சேவைக்கு காகித ரசீது ரத்து? ‘போஸ்ட் பெய்டு’ சேவைக்கு காகித ரசீது ரத்து? ...
மத்திய நிதி துறை செயலர் ஹஷ்முக் அதியா ஓய்வு பெறுகிறார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2018
02:39

புதுடில்லி: மத்திய நிதித் துறை செயலர், ஹஷ்முக் அதியா, வரும், 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்.குஜராத்தைச் சேர்ந்த, 1981ம் ஆண்டு, இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், நிதித் துறை முதன்மை செயலர் உட்பட, பல முக்கிய பொறுப்புகளை வகித்துஉள்ளார்.கடந்த, 2014ல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதும், நிதிச் சேவைகள் துறை செயலராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, வருவாய் துறை செயலராகவும், பின், நிதித் துறை செயலராகவும் பொறுப்பேற்றார்.இவரது பணிகளை பாராட்டி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:இந்தாண்டு துவக்கத்திலேயே, நவம்பர், 30க்கு பின், ஒரு நாள் கூட பணியாற்ற மாட்டேன் என, அதியா தெரிவித்து விட்டார்.அவர், ஓய்வு காலத்தை, தன் மகனுடனும், விருப்பமான யோகா பயிற்சியிலும் கழிக்க திட்டமிட்டுள்ளார்.அவர், வருவாய், நிதி துறைகளில் ஆற்றிய பணி, அளவிடற்கரியது. மத்திய – மாநில அரசு அதிகாரிகள் குழுவின் ஆதரவுடன், அவர் எடுத்த முயற்சியால் தான், 2017, ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த முடிந்தது.அதைத் தொடர்ந்து, குறுகிய காலத்தில், ஜி.எஸ்.டி., வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு துணை நின்று, புதிய வரி நடைமுறையை சுமுகமாக செயல்படுத்த உதவினார்.அவர், வருவாய் துறை செயலராக இருந்தபோது தான், கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்கான, பல சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.பணமதிப்பு நீக்கத்திற்கு பின், மிகப் பெரிய டெபாசிட்டுகளை கண்டுபிடித்து, வரி விதிக்க வழி வகுத்தார். இதனால், வரி செலுத்துவோர் எண்ணிக்கையும், வரி வருவாயும் அதிகரித்தது.பிரதமர் அறிவித்த, சமூக முன்னேற்ற திட்டங்கள் பலவற்றை வடிவமைப்பதில், ஹஷ்முக் ஆதியா ஆற்றிய பங்களிப்பு, என்றும் நினைவில் கொள்ளப்படும். அவரின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரின் கீழ், நான்கு ஆண்டுகள் நிதித் துறையில் பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன். இந்நாட்டிற்கு என்னால் இயன்றதை செய்துள்ளேன் என்பதில், எனக்கு மிகப் பெரிய திருப்தி. இதற்கு துணை நின்ற அதிகாரிகள், ஊழியர்களுக்கு என் நன்றி. எனக்கு வழிகாட்டிய பிரதமருக்கும், என் பணிகளை வெளிப்படையாக பாராட்டிய அருண் ஜெட்லிக்கும், தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஹஷ்முக் அதியா, நிதித் துறை செயலர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)