மத்திய நிதி துறை செயலர் ஹஷ்முக் அதியா ஓய்வு பெறுகிறார் மத்திய நிதி துறை செயலர் ஹஷ்முக் அதியா ஓய்வு பெறுகிறார் ...  தொழில் வளர்ச்சிக்கு உகந்த தமிழகம் : தொழில் துறை அமைச்சர் பெருமிதம் தொழில் வளர்ச்சிக்கு உகந்த தமிழகம் : தொழில் துறை அமைச்சர் பெருமிதம் ...
‘போஸ்ட் பெய்டு’ சேவைக்கு காகித ரசீது ரத்து?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2018
02:40

புதுடில்லி: மொபைல் போன் சேவை நிறுவனங்கள், ‘போஸ்ட் பெய்டு’ சந்தாதாரர்கள் செலுத்த வேண்டிய கட்டண விபரத்தை, கட்டாயம் காகித ரசீதில் தர வேண்டும் என்ற விதிமுறை ரத்தாகும் என, தெரிகிறது.தற்போது, வோடபோன் ஐடியா, ஏர்டெல், ஆர்ஜியோ, பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், ‘போஸ்ட் பெய்டு’ மற்றும் ‘ப்ரி பெய்டு’ என, இரு வகை சேவைகளை வழங்குகின்றன.இதில், ‘ப்ரீபெய்டு’ முறையில், முன்னதாக பணம் செலுத்தி, அதற்கேற்ப மொபைல் போன் அழைப்புகள், குறுந்தகவல்கள், இணைய சேவையை வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர்.ஆனால், ‘போஸ்ட் பெய்டு’ சேவையில், டெபாசிட் தவிர்த்து, மாதந்தோறும் மொபைல் போன் சேவையை பயன்படுத்திய பிறகு, அதற்கான கட்டணத்தை, வாடிக்கையாளர்கள் செலுத்துகின்றனர்.மாதந்தோறும் செலுத்த வேண்டிய மொபைல்போன் கட்டண விபரம் அடங்கிய காகித ரசீதை, தொலைதொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளரின் வீட்டிற்கு அனுப்புகின்றன.அத்துடன், மின்னணு தொழில்நுட்ப முறையில், மின்னஞ்சல் மூலமாகவும், கட்டண விபரம் அனுப்பப்படுகிறது.இந்நிலையில், போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு, காகித ரசீது அனுப்புவதை நிறுத்தி, மின்னணு முறையில் கட்டண விபரத்தை அனுப்புவது குறித்து, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான – ‘டிராய்’ பரிசீலிக்க உள்ளது.இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:தொலைதொடர்பு சேவை கட்டண விதிமுறையில், போஸ்ட் பெய்டு சந்தாதாரர்களுக்கு, காகித ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்ற அம்சம் இடம்பெற்றுள்ளது.இந்த விதிமுறையை நீக்கி, ‘மொபைல் பில்’ எனப்படும் மின்னணு ரசீது வழங்குவதை கட்டாயமாக்கலாம் என மொபைல்போன் சேவைநிறுவனங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.அதேசமயம், காகித ரசீது தான் வேண்டும் என, கோரும் சந்தாதாரருக்கு மட்டும், அதை வழங்கலாம் எனவும் நிறுவனங்கள் கூறியுள்ளன.இதேபோல, காகித ரசீது கட்டாயம் என்பதை நீக்குமாறு, பார்லி., சட்டசபை மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோரிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.இது, மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு வலுசேர்க்கும் என்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் துணை புரியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.காகிதங்களுக்காக மரங்கள் அழிக்கப்படுவதையும், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு, போஸ்ட் பெய்டு சந்தாதாரர்களுக்கு காகித ரசீதுகளை கட்டாயம் ஆக்கும் விதிமுறையை நீக்குவதா அல்லது தொடருவதாக என்பது குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, டிச., 10க்குள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். அதைத் தொடர்ந்து எதிர்கருத்து தெரிவிக்க விரும்புவோருக்கு, டிச., 24 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தொலைதொடர்பு சேவையில், அழைப்புகளின் தரம் தான் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. மொபைல்போன் சேவையின் தரம் குறைவாக உள்ளதாக, ஏராளமான புகார்கள் வருகின்றன. இத்துடன், கண்ணாடி நாரிழை வாயிலான இணைய சேவை தொடர்பான பிரச்னைகள் குறித்தும், இம்மாத இறுதியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும். அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும், இக்கூட்டத்தில் பங்கேற்கும்.அருணா சுந்தரராஜன்தொலைதொடர்பு துறை செயலர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)