பங்கு முதலீட்டை தவிர்க்கும் இளைஞர்கள் பங்கு முதலீட்டை தவிர்க்கும் இளைஞர்கள் ... 'ரிஸ்க்' எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் 'ரிஸ்க்' எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பாதுகாப்பான முதலீடுகள் மட்டும் எதிர்பார்த்த பலன் தருமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2018
04:14

அச்சம் காரணமாக, குறைந்த, ‘ரிஸ்க்’ உடைய முதலீடுகளை மட்டுமே நாடுவது ஒரு ரிஸ்காக அமைந்து, இலக்கை அடைவதை பாதிக்கலாம்.

முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்யும் போது, அவற்றின் ரிஸ்க் தன்மையை பரிசீலிப்பதும் அவசியம். குறைவான ரிஸ்க் கொண்ட முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்வதும் நல்லது தான். ஆனால், அனைத்து முதலீடுகளுமே குறைந்த ரிஸ்க் கொண்டதாக இருக்கும் போது, பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம் என்றாலும், இலக்குகளை அடைவதற்கான தடையாகவும் அமைந்துவிடலாம். அதிலும் குறிப்பாக அச்சம் காரணமாக, அதிக ரிஸ்க் கொண்ட முதலீடுகளை எல்லாம் தவிர்க்கும் தன்மை கொண்டிருந்தால், முதலீட்டின் மீது முழு பலனை பெற முடியாமல் போகலாம்.

பாதுகாப்பு முக்கியமானது என்றாலும், பாதுகாப்பை மட்டுமே முக்கிய அம்சமாக கருதி முதலீட்டு முடிவை மேற்கொள்ளும் போது ஏற்படக்கூடிய தவறுகள் மற்றும் அவற்றை தவிர்க்கும் வழிகள் என, நிதி வல்லுனர்கள் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

மறைந்திருக்கும், ‘ரிஸ்க்’:
முதலீடுகளை தேர்வு செய்யும் போது அவை நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைந்திருப்பது முக்கியம். அந்த வகையில் நீண்ட கால இலக்குகள் எனில், அதற்கேற்ற முதலீடுகளை நாட வேண்டும். பொதுவாக சமபங்கு முதலீடுகள் ரிஸ்க் அதிகமானவை என்றாலும், நீண்ட கால நோக்கில் ஏற்றவை என, கருதப்படுகின்றன. மாறாக, நீண்ட கால இலக்குகளுக்கு, குறுகிய கால பலன் தரக்கூடிய வைப்பு நிதி போன்ற முதலீடுகளை நாடும் போது, பணவீக்கத்தின் பாதிப்பு பலனை பாதிக்கும் ரிஸ்க் இருக்கிறது. இதனால், எதிர்பார்த்த பலனை பெற முடியாமல் போகலாம்.

எனவே, இழப்பு ஏற்படலாம் என்பது மட்டும் அல்ல ரிஸ்க். எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போவதும் ரிஸ்க் தான். சில நேரங்களில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே கூட ரிஸ்காக அமையலாம். இதை தவிர்க்கும் வகையில், பொருத்தமான முதலீடு வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். அதே போல், பி.பி.எப்., முதலீடு நீண்ட கால நோக்கிலானது. ஆனால் குறுகிய கால தேவைக்கு பணம் எடுக்க நினைத்தால், அதன் கட்டுப்பாடு சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, குறுகிய கால தேவைக்கு ஏற்ற வாய்ப்புகளை நாட தேர்வு செய்திருக்க வேண்டும்.

முதலீட்டாளர்கள் பலரும் செய்யும் மற்றொரு தவறு, வருமானம் தரும் முதலீடுகளை அதிகம் நாடுவது. வருமானம் ஈர்ப்புடையதாக இருக்கலாம், ஆனால் இது முதலீட்டின் வளர்ச்சியை பாதிக்கும். முதிர்வு காலத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. வைப்பு நிதி முதலீடு என்றால் கூட, வட்டி வருமானத்தை, மறுமுதலீடு செய்தால் தான் அதிக பலன் பெறலாம்.

வருமான வழி!
பொதுவாக வருமானம் தரும் முதலீடுகள் ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்றது. வயதில் இளையவர்கள், வளர்ச்சி வாய்ப்புள்ள முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும்.பல நேரங்களில், இழப்பு ஏற்படலாம் எனும் அச்சம், அதிக பலன் தரும் முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்வதற்கு தடையாக இருக்கும். அதிக ரிஸ்க் மற்றும் ஏற்ற இறக்கத்தை தவிர்க்க முடியாவிட்டாலும், நிதி இலக்கிற்கு ஏற்ற முதலீட்டை தேர்வு செய்தால் உரிய பலன் பெறலாம்.

எனவே, பாதுகாப்பு அம்சத்தை மட்டுமே முக்கியமாக கருதாமல், முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும். இழப்பு காரணமாக, நல்ல வாய்ப்புகளை தவறவிடாமல் இருக்க, பாதுகாப்பிற்காக அவசர கால நிதியை உருவாக்கி வைத்துக்கொண்டால், தயக்கம் இல்லாமல் பொருத்தமான முதலீடுகளை தேர்வு செய்யலாம். முதலீட்டு பரவலாக்க அணுகுமுறை இதற்கு உதவும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)