பதிவு செய்த நாள்
20 நவ2018
23:26
புதுடில்லி : ஸெர்கான் டெக்னாலஜிஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
ஸெர்கான் நிறுவனம், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கான லேபிள்களை அச்சடிக்கும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.புதிய பங்கு வெளியீட்டுக்கான அனுமதி கோரி, ஸெர்கான் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்தில், செபிக்கு விண்ணப்பித்திருந்தது.
தற்போது, செபியின் அனுமதி கிடைத்திருக்கும் நிலையில், இந்நிறுவனம், 59 லட்சம் பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட இருக்கிறது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, கடன்களை அடைக்கவும், டேராடூனில் புதிய ஆலை அமைக்கவும், செயல்பாட்டு மூலதன தேவைக்காகவும் பயன்படுத்த, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, சிஸ்டமேட்டிக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் என்ற, ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே மேற்கொள்கிறது.பங்குகளை, மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் பட்டியலிட, ஸெர்கான் டெக்னாலஜிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஸெர்கான் நிறுவனத்துடன் சேர்த்து, இந்த ஆண்டில், இதுவரை, 70 நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர, செபி அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|