‘யெஸ் பேங்க்’ இயக்குனர் சந்திரசேகர் விலகல் ‘யெஸ் பேங்க்’ இயக்குனர் சந்திரசேகர் விலகல் ...  வல்லுனர் வளம்: இந்தியாவுக்கு 53ம் இடம்; 2017ல் 51வது இடத்தில் இருந்தது வல்லுனர் வளம்: இந்தியாவுக்கு 53ம் இடம்; 2017ல் 51வது இடத்தில் இருந்தது ...
சூடு பிடிக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2018
23:31

மும்பை : கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் வெளிமதிப்பு குறைவு போன்றவற்றுக்கு இடையிலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் வர்த்தக நம்பிக்கை அதிகரித்து வருவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

சிட்பி மற்றும் கிரிசில் நிறுவனங்கள் இணைந்து, 1,100 நிறுவனங்களிடம், ஜூலை – செப்டம்பர் காலாண்டு நிலவரம் குறித்து, ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளன.அதன் விபரம்:மதிப்பீட்டு காலாண்டில், வர்த்தகம் குறித்து, பெரும்பான்மையான சிறிய நிறுவனங்கள் திருப்தி தெரிவித்துள்ளன.

தயாரிப்பு :
அவற்றில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையைச் சேர்ந்த, 40 சதவீத நிறுவனங்கள், வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளன.இதைவிட மேலான வளர்ச்சி, அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் இருக்கும் என, 50 சதவீத நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.வாகன உதிரிபாகங்கள், பொறியியல் மற்றும் மூலதன சாதனங்கள், உலோகம், சுரங்கம், ஆரோக்கிய பராமரிப்பு, மின்சாரம், சுற்றுலா, ஓட்டல் உள்ளிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களிடம் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

முந்தைய இரண்டு காலாண்டுகளை விட, அதிக, ‘ஆர்டர்’ கிடைத்ததாக, 40 சதவீத, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு, ‘ஆர்டர்’ சற்று குறைந்துள்ளன.நிதி நிறுவனங்கள்ஆய்வு செய்த, 10 நிதி நிறுவனங்களில், ஆறு நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஒட்டுமொத்த வர்த்தகம் மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. மூன்று நிறுவனங்கள், திருப்திகரமாக உள்ளதாக கூறியுள்ளன.

ஒன்பது நிறுவனங்கள், அக்டோபர் – டிசம்பர் காலாண்டிலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சார்ந்த வர்த்தகம் நன்கு இருக்கும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளன. அதேசமயம், வாராக் கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது என, ஆறு நிறுவனங்களும், குறையும் என, முன்று நிறுவனங்களும் கூறியுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)