தலைமை பொருளாதார ஆலோசகராக பூனம் குப்தா? தலைமை பொருளாதார ஆலோசகராக பூனம் குப்தா? ... ஆஸ்திரேலியாவில் ‘இன்போசிஸ்’ ஆராய்ச்சி மையம் ஆஸ்திரேலியாவில் ‘இன்போசிஸ்’ ஆராய்ச்சி மையம் ...
கம்ப்யூட்டர் சந்தை 20.2 சதவீத வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2018
23:18

புதுடில்லி : இந்தியாவில் கம்ப்யூட்டர் சந்தை, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, இரண்டாவது காலாண்டில், 20.2 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக, ஐ.டி.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், கம்ப்யூட்டர் சந்தை குறித்து ஆய்வு செய்து, ஐ.டி.சி., நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் கம்ப்யூட்டர்சந்தை, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், அதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், 20.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இக்காலகட்டத்தில், 27 லட்சம் கம்ப்யூட்டர்கள், சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம், கம்ப்யூட்டர் விற்பனையானது, கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 10.6 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.இரண்டாவது காலாண்டில் வர்த்தக ரீதியிலானவர்கள், 12.25 லட்சம் கம்ப்யூட்டர்களையும்; சாதாரண நுகர்வோர், 14.45 லட்சம் கம்ப்யூட்டர்களையும் வாங்கி உள்ளனர்.வரும் நாட்களில், ‘இன்டெல் – சிப்’ தட்டுப்பாட்டாலும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்துக்கு பிறகான மந்தநிலையாலும், கம்ப்யூட்டர்கள் விற்பனை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்.பி., நிறுவனம், 30.7 சதவீதம் அளவுக்கு சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ‘டெல்’ நிறுவனம், 22.9 சதவீதத்துடனும், ‘லெனொவோ’ நிறுவனம், 21.3 சதவீதத்துடனும், ‘ஏசர்’ 12.1 சதவீத சந்தை பங்களிப்புடனும் உள்ளன.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)