கம்ப்யூட்டர் சந்தை 20.2 சதவீத வளர்ச்சி கம்ப்யூட்டர் சந்தை 20.2 சதவீத வளர்ச்சி ... பங்கு சந்தை திடீர் சரிவிற்கு என்ன காரணம்? ‘செபி’ விசாரணைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு பங்கு சந்தை திடீர் சரிவிற்கு என்ன காரணம்? ‘செபி’ விசாரணைக்கு பிரதமர் ... ...
ஆஸ்திரேலியாவில் ‘இன்போசிஸ்’ ஆராய்ச்சி மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2018
23:20

புதுடில்லி : ‘இன்போசிஸ்’ நிறுவனம், ஆஸ்திரேலியாவில், 3 ஆராய்ச்சி மையங்களை அமைப்பதன் மூலம், 1,200 பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், ஆஸ்திரேலியாவில், 3 ஆராய்ச்சி மையங்களை அமைக்கப் போவதாகவும், 2020ம் ஆண்டில், இதன் மூலம், 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், ஏற்கனவே அமெரிக்காவில் இதே போன்றதொரு ஆராய்ச்சி மையத்தை அமைப்பதாகவும், அடுத்த ஆண்டுக்குள், 10 ஆயிரம் உள்ளூர் ஊழியர்களுக்கு அதன் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் அமைக்கப்படும் ஆராய்ச்சி மையத்தில் பணியமர்த்தப்படுபவர்களில், 40 சதவீதம் பேர், ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பட்டதாரிகளாக இருப்பர்.கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு வாய்ப்பு வழங்கப்படும் என, ‘இன்போசிஸ்’ தெரிவித்துள்ளது.

இருப்பினும், இதற்காக எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட உள்ளது என்பது குறித்து, இந்நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து, தலைமை செயல்பாட்டு அதிகாரி, பிரவின் ராவ் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில், எங்கள், 20 ஆண்டு கால பயணத்தில், இந்த அறிவிப்பு மிக முக்கியமான மைல்கல் ஆகும். இந்த முயற்சியால், நிறுவனத்துக்கு வலுவான அடித்தளமும், இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றிலான தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பும் கிடைக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)