பதிவு செய்த நாள்
27 நவ2018
07:11
புதுடில்லி : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியால், இந்திய ஆபரண துறையின் ஏற்றுமதி குறைந்து, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள், வர்த்தகத்தை கைப்பற்றும் ஆபத்து உருவாகியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டனர்.
தடை :
இந்த மோசடி வெளியாகி, ஒன்பது மாதங்கள் ஆன பின்னரும், ஆபரண துறையினருக்கு கடன் வழங்க, வங்கிகள் தயங்குகின்றன. ரிசர்வ் வங்கி, குறுகிய கால அன்னியச் செலாவணி கடன்களை வழங்க, வங்கிகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால், ஆபரண ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர், கோலின் ஷா கூறியதாவது:பெரும்பாலான ஆபரண ஏற்றுமதி, கடன் அடிப்படையில் தான் நடைபெறுகிறது. வங்கிகள் கடன் தர மறுப்பதால், ஏற்கனவே குறைந்து வரும் ஆபரண ஏற்றுமதி, மேலும் சரிவைக் காணும்.கடன் மற்றும் கடனை புதுப்பிக்க கோரும் விண்ணப்பங்களை, வங்கிகள் இரண்டு பூதக் கண்ணாடிகள் மூலம் பரிசீலிக்கின்றன. அதனால், கடன் பெற்று, ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
வேலையிழப்புஏற்கனவே, ஜி.எஸ்.டி., காரணமாக, வர்த்தகர்கள் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கடன் வசதியும் கிடைக்காததால், அடுத்த ஆறு மாதங்களில், ஆபரண துறையில் ஏராளமான வேலையிழப்புகள் ஏற்படும்.நம் வர்த்தகம், சீனா, தாய்லாந்து போன்ற போட்டி நாடுகளுக்கு சென்று விடும் ஆபத்தும் உள்ளது.
டில்லியைச் சேர்ந்த, பி.சி.ஜுவல்லரி நிறுவனம், நடப்பு நிதியாண்டில், 25 சதவீத ஏற்றுமதியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது போல, பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர் சரிவு :
இந்தியாவின் ஏற்றுமதியில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை, 16 சதவீத பங்கை கொண்டுள்ளது. கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், இத்துறையின் ஏற்றுமதி, 5 சதவீதம் குறைந்து, 4,100 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இந்நிலையில், நடப்பு, 2018 – -19ம் நிதியாண்டில், ஏப்., – அக்., வரையிலான ஏழு மாதங்களில், 2 சதவீத ஏற்றுமதி சரிந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|