ரிலையன்ஸ் இன்ப்ரா.,வில் அனில் அம்பானி மகன் ரிலையன்ஸ் இன்ப்ரா.,வில் அனில் அம்பானி மகன் ... பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 42,000 கோடி; மறு பங்கு மூலதன திட்டத்தில் மத்திய அரசு உதவி பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 42,000 கோடி; மறு பங்கு மூலதன திட்டத்தில் மத்திய ... ...
பி.என்.பி., மோசடியால் ஆபரண ஏற்றுமதி பாதிப்பு; வணிகத்தை சீனா, தாய்லாந்து கைப்பற்றும் ஆபத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2018
07:11

புதுடில்லி : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியால், இந்திய ஆபரண துறையின் ஏற்றுமதி குறைந்து, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள், வர்த்தகத்தை கைப்பற்றும் ஆபத்து உருவாகியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டனர்.

தடை :
இந்த மோசடி வெளியாகி, ஒன்பது மாதங்கள் ஆன பின்னரும், ஆபரண துறையினருக்கு கடன் வழங்க, வங்கிகள் தயங்குகின்றன. ரிசர்வ் வங்கி, குறுகிய கால அன்னியச் செலாவணி கடன்களை வழங்க, வங்கிகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால், ஆபரண ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர், கோலின் ஷா கூறியதாவது:பெரும்பாலான ஆபரண ஏற்றுமதி, கடன் அடிப்படையில் தான் நடைபெறுகிறது. வங்கிகள் கடன் தர மறுப்பதால், ஏற்கனவே குறைந்து வரும் ஆபரண ஏற்றுமதி, மேலும் சரிவைக் காணும்.கடன் மற்றும் கடனை புதுப்பிக்க கோரும் விண்ணப்பங்களை, வங்கிகள் இரண்டு பூதக் கண்ணாடிகள் மூலம் பரிசீலிக்கின்றன. அதனால், கடன் பெற்று, ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

வேலையிழப்புஏற்கனவே, ஜி.எஸ்.டி., காரணமாக, வர்த்தகர்கள் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கடன் வசதியும் கிடைக்காததால், அடுத்த ஆறு மாதங்களில், ஆபரண துறையில் ஏராளமான வேலையிழப்புகள் ஏற்படும்.நம் வர்த்தகம், சீனா, தாய்லாந்து போன்ற போட்டி நாடுகளுக்கு சென்று விடும் ஆபத்தும் உள்ளது.

டில்லியைச் சேர்ந்த, பி.சி.ஜுவல்லரி நிறுவனம், நடப்பு நிதியாண்டில், 25 சதவீத ஏற்றுமதியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது போல, பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர் சரிவு :
இந்தியாவின் ஏற்றுமதியில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை, 16 சதவீத பங்கை கொண்டுள்ளது. கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், இத்துறையின் ஏற்றுமதி, 5 சதவீதம் குறைந்து, 4,100 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இந்நிலையில், நடப்பு, 2018 – -19ம் நிதியாண்டில், ஏப்., – அக்., வரையிலான ஏழு மாதங்களில், 2 சதவீத ஏற்றுமதி சரிந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)