ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., கடன் தீர்வு இயக்குனர் குழு கைவிரிப்பு ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., கடன் தீர்வு இயக்குனர் குழு கைவிரிப்பு ...  பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வருமானவரி தாக்கல் உயர்வு பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வருமானவரி தாக்கல் உயர்வு ...
புதிய ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவம்:2019, ஏப்., 1 முதல் எளிய நடைமுறை அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2018
23:36

புதுடில்லி:‘‘புதிய, எளிமையான, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவங்கள், 2019, ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன,’’ என, மத்திய வருவாய் துறை செயலர், அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.


ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த நிறுவனங்கள், வணிகர்கள், மாதாந்திர விற்பனை விபரங்களுக்கு, ‘ஜி.எஸ்.டி.ஆர் – 1’ படிவத்தை பயன்படுத்துகின்றனர். கொள்முதல், விற்பனை உள்ளிட்ட, முழு வணிக விபரங்களை, மாதந்தோறும், ‘ஜி.எஸ்.டி.ஆர் – 3’ படிவத்தில் அளிக்கின்றனர். ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில், இந்த படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதில், பல்வேறு சிரமங்கள் உள்ளதாக புகார் எழுந்தது.


அதனால், அந்த படிவங்களுக்கு மாற்றாக, எளிமையான, ‘சாஹஜ்’ மற்றும் ‘சுகம்’ என்ற இரு வரைவு படிவங்கள், கடந்த ஜூலையில், கருத்து கேட்புக்காக வெளியிடப்பட்டன.தொழில் கூட்டமைப்புகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், புதிய படிவங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு, ஏப்., 1 முதல், எளிமையான, புதிய, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவங்கள், நடைமுறைக்கு வரும் என, அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது:நடப்பு, 2018 --– -19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., மூலம், 13.48 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், 7.76 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.மாதம், 1 லட்சம் கோடி ரூபாயாவது வசூலிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால், நவம்பரில், 4,000 கோடி ரூபாய் குறைந்து, 97 ஆயிரத்து, 637 கோடி ரூபாய் தான் வசூலாகிஉள்ளது. மார்ச்சுக்குள், நிதியாண்டின் வசூல் இலக்கு எட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


சட்ட நடவடிக்கை


ஜி.எஸ்.டி., செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் குறித்த தகவல்களை, வருவாய் துறை சேகரித்து வருகிறது. அத்தகையோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

அஜய் பூஷன் பாண்டே செயலர்,

மத்திய வருவாய் துறை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)