புதிய ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவம்:2019, ஏப்., 1 முதல் எளிய நடைமுறை அறிமுகம் புதிய ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவம்:2019, ஏப்., 1 முதல் எளிய நடைமுறை அறிமுகம் ...  நாட்டின் சேவைகள் துறை நான்கு மாதங்கள் காணாத வளர்ச்சி நாட்டின் சேவைகள் துறை நான்கு மாதங்கள் காணாத வளர்ச்சி ...
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வருமானவரி தாக்கல் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2018
23:41

புதுடில்லி:‘‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், நடப்பு, 2018 -– 19 வரி மதிப்பீட்டு ஆண்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை, 50 சதவீதம் உயர்ந்து, 6.08 கோடியாக அதிகரித்துள்ளது,’’ என, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர், சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில், நேரடி வரிகள் மூலம், 11.5 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மொத்த நேரடி வரி வசூல் வளர்ச்சி, 16.5 சதவீதமாகவும், நிகர நேரடி வரி வசூல் வளர்ச்சி, 14.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இது, பணமதிப்பு நீக்கத்தால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை, வசூல் ஆகியவை அதிகரித்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது.


கடந்த ஆண்டு, வரி செலுத்தும் நிறுவனங்கள் எண்ணிக்கை, 7 லட்சத்தில் இருந்து, 8 லட்சமாக உயர்ந்துள்ளது.விரைவில், நான்கு மணி நேரத்தில், வருமான வரித் துறை அளிக்கக்கூடிய, ‘இ – பான்’ எனப்படும் வருமான வரி கணக்கு எண் வழங்கும் திட்டம் அறிமுகமாக உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத, இரண்டு லட்சம் பேருக்கு, விளக்கம் கேட்டு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. இதில், பொருந்தாத கணக்கு விபரங்களை தாக்கல் செய்தோரும் அடங்குவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)