பதிவு செய்த நாள்
05 டிச2018
23:35
திருப்பூர்:கட்டண உயர்வு வழங்க வலியுறுத்தி, திருப்பூர் நிட்டிங் துறையினர், நேற்று முதல், உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கினர். இதனால், 55 கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி முடங்கியது.
திருப்பூரில், உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு துறைக்கு தேவையான பின்னல் துணி தயாரிக்கும், 1,000 நிட்டிங் நிறுவனங்கள் இயங்குகின்றன.நிட்டிங் ஊசி விலை, தொழிலாளர் சம்பளம், மின் கட்டணம் உயர்ந்துஉள்ளதால், நிட்டிங் தொழில் அமைப்புகளான, ‘நிட்மா’ மற்றும், ‘சிம்கா’ சங்கங்கள் இணைந்து, மே 1 முதல், கட்டண உயர்வை அறிவித்தன.
துணி உற்பத்தி ரகத்தை பொறுத்து, 20 முதல், 25 சதவீதம் வரை நிட்டிங் கட்டணம் உயர்த்தப் பட்டது.ஏழு மாதங்களாகியும், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங் நிறுவனத்துக்கு கட்டண உயர்வு வழங்கவில்லை. உடனடியாக கட்டண உயர்வு வழங்க வலியுறுத்தி, நிட்மா மற்றும் சிம்கா சங்கங்கள், நேற்று முதல், உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளன.
தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்க, ‘சிம்கா’ தலைவர், விவேகானந்தன் கூறுகையில், ‘‘பெரும்பாலான உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், துணி உற்பத்தி கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடிக்கின்றன. ‘‘இதனால், நிட்டிங் நிறுவனங்கள், மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. உற்பத்தி நிறுத்த போராட்டத்தால், தினமும், 55 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னல் துணி உற்பத்தி பாதிக்கப்படுகிறது,’’ என்றார்.
இந்நிலையில், ‘நிட்மா’ மற்றும் ‘சிம்கா’ சங்கங்கள் சார்பில், அவசர கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்க உள்ளனர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|