பதிவு செய்த நாள்
06 டிச2018
12:29
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (டிச.,06) சரிவுடன் துவங்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாகவும், உலோகம் மற்றும் எண்ணெய் துறை பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதாலும் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 298.53 புள்ளிகள் சரிந்து 35,585.88 புள்ளிகளாகவும், நிப்டி 94 புள்ளிகள் சரிந்து 10,688.90 புள்ளிகளாகவும் உள்ளன. உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, கட்டுமானம், ஆட்டோ, வங்கி உள்ளிட்ட துறைகளின் பங்குகள் வெகுவாக சரிந்துள்ளன. வேதாந்தா, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், யெஸ் வங்கி, மாருதி, ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரை சரிந்துள்ளன.
அதே சமயம், பவர்கிரிட், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2 சதவீதம் உயர்வுடன் காணப்படுகின்றன. கச்சா எண்ணெய் விலை குறித்த பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்களின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது, சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது உள்ளிட்டவைகளும் பங்குச்சந்தைகளின் சரிவிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|