பதிவு செய்த நாள்
07 டிச2018
00:01
புதுடில்லி:இந்தியாவில், ஆடம்பர கார் பிரிவில், வாடிக்கையாளர்களுக்கு அதிக திருப்தி தரும் நிறுவனங்களில், ஜெர்மனியைச் சேர்ந்த, மெர்சிடெஸ் பென்ஸ் முதலிடத்தை பிடித்துஉள்ளது.
இது குறித்து, சர்வதேச ஆய்வு நிறுவனமான, ஜே.டி.பவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு, இந்தியாவின் ஆடம்பர கார் பிரிவில், திருப்தியான வாடிக்கையாளர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இதற்காக, 2017 செப்., முதல், இந்தாண்டு, ஆகஸ்ட் வரை, புதிதாக, ஆடம்பர கார்கள் வாங்கிய, 250 உரிமையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
முகமை நிறுவன வசதி, வினியோகம், முகவர் ஆலோசனை, ஆவணங்கள், முகவர் வலை தளங்களின் செயல்பாடு, விற்பனை நடைமுறை ஆகிய, ஆறு அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம், 903 புள்ளிகள் பெற்று, முதலிடத்தை பிடித்துள்ளது.பி.எம்.டபிள்யு., இந்தியா நிறுவனம், 900 புள்ளிகளுடன், 2-வது இடத்தை பெற்று உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளித்த நிறுவனங்களின் வரிசையில், ஆடி இந்தியா நிறுவனம், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.ஆடம்பர கார்களை வாங்கியோரில், 49 சதவீதத்தினர், முகமை நிறுவனங்களுக்கு நேரில் வருவதற்கு முன், மொபைல்போன், வலைதளம் வாயிலாக விசாரித்து உள்ளனர்.அதில், 52 சதவீதம் பேர், பல்வேறு முகமை நிறுவனங்களின் விலை விபரங்களை ஒப்பீடு செய்த பிறகே, கார்களை வாங்கியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|