பதிவு செய்த நாள்
07 டிச2018
00:21
மும்பை:‘‘வங்கித் துறையில் தொடர்ந்து பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை, நடப்பு நிதியாண்டு வரை தொடரும்,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரால் ஆச்சார்யா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
ரிசர்வ் வங்கி, நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், வெளிச் சந்தையில் அரசு கடன் பத்திரங்கள், ரொக்க நிர்வாக பத்திரங்கள் போன்றவற்றின் ஏலம் மூலம், 1.36 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, வங்கித் துறையில் புழக்கத்திற்கு வந்துள்ளது.
கடந்த மாதம், ரிசர்வ் வங்கி, டிசம்பரில், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, வெளிச் சந்தையில் அரசு கடன் பத்திரங்கள் வாங்கப்படும் என, தெரிவித்து இருந்தது.அதன்படி, இம்மாதம், அரசு கடன் பத்திரங்கள், ரொக்க நிர்வாக பத்திரங்கள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெற உள்ளது.இதில், குறுகிய கால முதிர்வைக் கொண்ட, ரொக்க நிர்வாக பத்திரங்கள் மூலமாக மட்டும், வங்கித் துறையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும்.
நிதிச் சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் இது போன்ற நடவடிக்கைகள், அடுத்த ஆண்டு, மார்ச் வரை தேவைப்படும் என, தெரிகிறது. அதுவரை, தொடர்ந்து, பணப் புழக்கத்திற்கு தேவையான நடவடிக்கைகளை, ரிசர்வ் வங்கி எடுக்கும்.எனினும், அது, சர்வதேச நிலவரங்கள், அன்னியச் செலாவணி மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் தாக்கத்தை பொறுத்தது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|